அவிநாசி, பிப்.14- அவிநாசி அருகே பொங்கலூர் தொட்டிபாளைத்தில் விவசாய விளை நிலத்தில் ரசாயன நிறுவனம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், பொங்கலூர் ஊராட்சி பகுதி யில் விவசாயத் தொழிலே பிரதான மாக உள்ளது. குறிப்பாக தொட்டி பாளையம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் விளை நிலங்களை நம்பியே உள்ளனர். இந் நிலையில், தொட்டிபாளையம் பகு தியில் ஒரு ஏக்கர் பரப்பளவில் தனி யார் ரசாயன நிறுவனம் அமைக்க வுள்ளதாக அறிந்த பொதுமக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள னர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, நாங்கள் விளை நிலங் களையும், கால்நடை வளர்ப்பை யும் மட்டுமே நம்பியுள்ளோம். இதற் கிடையில் இங்கு ரசாயன நிறுவனம் அமைக்கப்பட்டால், நிலத்தடி நீர் மாசுபட்டு, விளை நிலங்கள், கால் நடைகள் உள்ளிட்டவை பாதிக்கப்ப டும். மேலும், பொதுமக்களுக்கும் சுகாதாரக் கேடு ஏற்படும். ஆகவே இப்பகுதியில் ரசாயன நிறுவனம் அமைக்க கூடாது என ஏற்கனவே ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளோம். இதற்கு ஊராட்சி நிர்வாகம் ஒருபோதும் அனுமதி வழங்கக் கூடாது என தெரி வித்தனர். இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் விமலா செல்வராஜிடம் கேட்ட போது, தனியார் ரசாயன நிறு வனம் அமைப்பதற்கான கட்டுமா னப் பணிக்கு அனுமதி கோரியிருந் தனர். இருப்பினும் விவசாயத்திற்கு எதிரானதால், அனுமதி வழங்கப்பட வில்லை என்றார்.