மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணம் வழங்கல்
சேலம், ஜூலை 29- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, தலைமையில் திங்களன்று நடைபெற்றது. இதில், ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 430 ரூபாய் மதிப்பி லான மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கப் பட்டது. இதுகுறித்து சேலம் ஆட்சியர் கூறுகையில், பொதுமக் களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும், அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்திடவும், பெண்களின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் அணைத்தும் அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதி யோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனா ளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் 271 மனுக்கள் பெறப்பட் டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி மனுக் களை வழங்கும் வகையில் தரை தளத்தில் நடத்தப்பட்டு வரும் குறைதீர் முகாமில் வீட்டுமனைப் பட்டா, உதவி உபக ரணங்கள், பராமரிப்பு உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அளிக்கப்பட்ட 14 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.1,06,000/- மதிப்பி லான பேட்டரியால் இயங்கும் அதிநவீன சக்கர நாற்காலி, 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.6,840/- மதிப்பிலான தையல் இயந்திரங்கள், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.2,750/- மதிப்பிலான காதொலிக் கருவிகள் என மொத்தம் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,22,430/- மதிப்பிலான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பெ. மேனகா, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆக்ரிதி சேத்தி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு அலுவலர் சே. கணேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நல அலுவலர் இரா. முருகன், மாவட்ட ஆதிதிராவி டர் நல அலுவலர் சுகந்தி பரிமளம், மாவட்ட ஆட்சியரின் நேர் முக உதவியாளர் (தேர்தல்கள்) சிவசுப்பிரமணியன் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரா. மகிழ்நன் உள்ளிட்ட அரசுத்துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மின் வாரிய ஊழியருடன் கைகலப்பில் ஈடுபட்ட காவலர்
உதகை, ஜூலை 29– உதகை மின்வாரிய அலுவலகத்தில் மின் வாரிய ஊழியர்களுடன் போலீசார் கைகலப் பில் ஈடுபட்ட வீடியோ வைரலான நிலையில், அதிகாரிகள் தலையீட்டை அடுத்து போலீ சார் வருத்தம் தெரிவித்து பிரச்சனைகளை சுமூகமாக முடித்தனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்கள் பெய்த கன மழை மற்றும் பலத்த காற்றுக்கு பெரும்பாலான பகுதிகளில் மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்துள்ளது. பல இடங்க ளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல கிரா மங்கள் இருளில் மூழ்கியது. மின்வாரிய ஊழி யர்கள் இரவு பகல் பாராமல் சீரமைப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். மின்வாரியத் தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் கூடு தல் பணி சுமை இருந்தபோதும், மின் வாரிய ஊழியர்கள் தங்களது பணிகளை தொய் வின்றி செய்து வருகின்றனர். இந்நிலையில், புதுமந்து காவலர் குடியி ருப்பில் உள்ள சிவநாதன் என்கிற போலீசார் திங்களன்று காலை உதகை பேருந்து நிறுத் தில் உள்ள மின் பகிர்மான வட்ட அலுவ லகத்தில் குடியிருப்பில் மின்சாரம் துண்டிப்பு குறித்து தகவல் தெரிவிக்க சென்றார். அப் போது, மின்வாரிய ஊழியருக்கும், சிவநாத னுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது கைகலப்பாக மாறியுள்ளது. இந்த வீடியோ சமூக வலை தளத்தில் வைர லானது. இதில், மின் ஊழியர் கேங்மேன் வீர மணியை, காவலர் சிவநாதன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், மின்வாரிய ஊழியர்கள் அந்த காவலர் மீது நடவடிக்கை கோரி பணிகளை புறக்கணித்தனர். இது குறித்து மின்வாரிய ஊழியர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து, நடந்த பேச்சுவார்த்தையில் நடந்த சம்பவத்திற்கு சிவநாதன் வருத்தம் தெரிவித்ததை அடுத்து, ஊழியர்கள் பணிக்கு சென்றனர். இச்சம்பவத்தால் மின்வாரிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற் பட்டது.
மகரந்தம் இலக்கிய சந்திப்பு
ஈரோடு, ஜூலை 29- தமுஎகச-வின் பொன்விழாக் கொண்டாட் டத்தின் தொடக்கமாக மகரந்தம் இலக்கியச் சந்திப்பு நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை கள் சங்கத்தின் ஈரோடு மாவட்டக்குழுவின் சார்பில் மகரந்தம் இலக்கியச் சந்திப்பு திங்க ளன்று நடைபெற்றது. இந்த இலக்கியச் சந் திப்பை தமுஎகச ஈரோடு மாவட்டத் தலை வர் மு.சங்கரன் தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் இ.கலைக்கோவன் வரவேற் றார். இந்த பொன்விழாக் கொண்டாட்டத்தின் தொடக்கமாக அமைந்த இந்நிகழ்வில் தமுஎ கச -வின் 49 ஆண்டுகால வரலாற்றைக் கூறும் காணொளி திரையிடப்பட்டது. தொடர்ந்து, வேர்களுக்கு விழுதுகளின் காணிக்கை நிகழ் வில், ஈரோட்டில் அமைப்பைக் கட்டுவதில் முக்கியப் பங்காற்றிய தி.தங்கவேல், வீ. ராஜூ, ப.மாரிமுத்து, ந.முருகையா உள்ளிட்ட 10 தோழர்களுக்கு மரியாதை செய்யப்பட் டது. நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட வேர் கள் நம்முடைய அமைப்பு செய்ய வேண்டி யவற்றைச் சுட்டிக்காட்டியதுடன், அவற்றைச் செய்வதற்கு விழுதுகளுடன் அணியமாக இருப்பதாகத் தெரிவித்தனர். இதனையடுத்து, எழுத்தாளர் வே.பிர சாந்த்தின் ஆனைமலை நாவலை, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஈரோடு மாவட்டச் செயலாளர் செ.கார்த்திகேயன் மதிப்புரை செய்தார். சூழலியல் தொடர்பான நூல்க ளைப் பற்றிய பறவைப் பார்வையை முன் வைத்து, “ஆனைமலை” நாவலை அனைவ ரும் வாசித்துப் பரவலாக்க வேண்டிய தேவை யைச் சுட்டிக்காட்டினார். முடிவில், மாவட் டச் செயற்குழு உறுப்பினர் ஆ.முத்துக்கண் ணன் நன்றி கூறினார்.
சர்வதேச புலிகள் தினம் கொண்டாட்டம்
கோவை, ஜூலை 29- ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனக்கோட்டம், மானாம் பள்ளி வனச்சரகம் மற்றும் வால்பாறை வனச்சரகம் சார் பில் திங்களன்று சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப் பட்டது. சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு திங்க ளன்று வால்பாறையில் உள்ள பழங்குடியின மாணவ, மாணவியர்கள் பயி லும் உண்டு, உறைவிடப் பள்ளியில் சர்வதேச புலிகள் தின விழா கொண்டாடப் பட்டது. இவ்விழாவில், பள்ளி மாணவ, மாணவிகள் புலி வேடமிட்ட நடனம், புலி யின் பண்புகள் மற்றும் முக் கியத்துவம் குறித்த விழிப்பு ணர்வு உரைகள், ஓவியப் போட்டி ஆகியவை இடம் பெற்றது. இவ்விழாவின், முடிவில் போட்டியில் பங்குபெற்ற மாணவ, மாண வியர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பாராட் டுச் சான்றிதழ் வழங்கப்பட் டது. நிகழ்வில் வனச்சரக அலுவலர்கள் கு. கிரிதரன், கோ.வெங்கடேஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் வனத்துறையினர், பொதுமக்கள் என திரளா னோர் பங்கேற்றனர்.
விபத்தில் ஒருவர் பலி
கோவை, ஜூலை 29- பேரூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். சேலத்தைச் சேர்ந்த சங்கர் மற்றும் கோவை இடை யார்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோர், ஆலந்துறையில் கோவை கொண்டாட்டத்திற்கு சென்று விட்டு திரும்பி கொண்டு இருந்தனர். அப்பொழுது, பேரூர் ஆவின் பால் கம்பெனி எதிரே வரும்பொழுது சங்கர் ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்தது. இதில், எதிரே இருசக்கர வாகனத் தில் வந்த பூலுவபட்டி பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் அவருடன் வந்த ஜெகநாதன் ஆகியோர் மீது மோதியது. இந்த விபத்தை கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடி யாக இது குறித்து ஆம்புலன்ஸ் மற்றும் பேரூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் படுகாயம் அடைந்த அனைவரை யும் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்த வெங்கடேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், அவருடன் வந்த ஜெகநாதன் சிகிச்சை பெற்று வரு கிறார். மற்றொரு காரில் வந்த யுவராஜின் குடும்பத்தினர் தனி யார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இது குறித்து பேரூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளாவைப் போல் தமிழகத்திலும் நேரடியாக தேங்காய் கொள்முதல் செய்திடுக
உடுமலை, ஜூலை 29 - தென்னை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பச்சை தேங்காய் கொள்மு தல் செய்யும் கேரள அரசை போல், தமிழ் நாடு அரசும் கொள்முதல் செய்ய வலியு றுத்தி உடுமலை நகராட்சி அலுவ கத்தின் முன்பு திங்களன்று விவசாயி கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாடல் நோயால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு இன்று வரை உரிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படா மல் உள்ளதால் விவசாயிகளுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் அர சின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அரசு கொள்முதல் செய்த கொப்பரையை தேங்காய் எண்ணை யாக மாற்றி நியாய விலை கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். கொள்மு தல் செய்த விலையை விட குறைவாக தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விடு வதால் அதிக இழப்பு ஏற்படுவதை தடுக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து சமையலுக்கு பாமாயில் இறக் குமதி செய்வதை தடை செய்து, தேங் காய் எண்ணை விற்பனை செய்ய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்பது உள் ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட் டத்தில் வலியுறுத்தப்பட்டது. உடுமலையில் தோட்டக்கலைத்து றை சார்பில் தென்னை விவசாயிக ளுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நகராட்சி மண்டபத்தில் நடைபெற்றது. அந்த இடத்துக்கு அருகே ஆர்ப்பாட்டம் நடத் தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
வீதிகளில் ஓடும் பாதாள சாக்கடை கழிவு நீர்
வீதிகளில் ஓடும் பாதாள சாக்கடை கழிவு நீர் உடுமலை, ஜூலை 29 - உடுமலை நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் வீதிகளில் செல்வதால், பொது மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே போர்க்கால அடிப்படை யில் உடனடியாக நகராட்சி நிர்வாகம் இப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள் ளனர். உடுமலை நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வார்டுகளில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். கடந்த 2013ஆம் ஆண்டு நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ரூ.56.07 கோடி மதிப்பில் நகர் பகுதி முழுவதும் சுமார் 97 கிலோமீட்டர் நீளத்தில் 3900 இறங்கு குழாய்கள் மூலம் சாக் கடை நீர் சேகரிக்க பட்டு, ஏரிப்பாளையம் பகுதியில் 7.81 எம். எல்.டி திறன் கொண்ட சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட் டது. நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை குழாய்களில் முறையாக பராமரிப்பு இல்லாத காரணத்தால் கழிவுநீர் அனைத்தும் வீதிகளில் சென்று வருகிறது. இதனால், பொது மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால், உடனடியாக நகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை திட்டத்தின் குளறுபடிகளை சரி செய்து முறையான பராமரிப்பு பணியை நடைமுறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் திருப்பூர், ஜூலை 29 - மின் கட்டண உயர்வை கண்டித்து திருப்பூர் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர், ஊத்துக்குளி, உடுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், மின் விநி யோகத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் நோக்கில் 2020 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும். தேர்தல் வாக்குறுதிபடி மாதம் தோறும் மின் கணக்கீடு செய்ய வேண்டும். உயர்த்தப் பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் ஆகிய கோரிக் கைகளை வலியுறுத்தினர். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ரவி, மாவட் டச் செயலாளர் இசாக், துணை மேயர் ஆர்.பாலசுப்பிர மணியம் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றனர்.
குடியிருப்பு அருகில் கொட்டப்படும் மனித கழிவுகள்: காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார்
அவிநாசி, ஜூலை 29- அவிநாசி அருகே குடியிருப்புகள் அருகில் மனிதகழிவு கள் கொட்டுவதை தடுக்க கோரி அப்பகுதி மக்கள் ஞாயிற் றுக்கிழமை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். செம்பியநல்லூர் ஊராட்சி கிரீன்லேண்ட் அக்வா அவென்யூ, சாய் கார்டன் உள்ளிட்ட பகுதி மக்கள் காவல் நிலை யத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, எங்கள் பகுதியில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நி லையில், குடியிருப்பு அருகில் செப்டிக் டேங்க் வாகனம் மூலம், தோட்டத்துப் பகுதியில் மனித கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் குடியிருப்பு முழுவதும் துர்நாற்றம் வீசி, சுகாதார கேடு ஏற்பட்டு நோய் தொற்று அபாயம் உருவாகி யுள்ளது. குறிப்பாக குழந்தைகள் உடல் நலம் பாதிப்பு ஏற்ப டுகிறது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரி யப்படுத்தியும், எவ்வித நடவடிக்கை இல்லை. எனவே மனிதக் கழிவுகளை கொட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
தீயணைப்பு துறை ஒத்திகை
சேலம், ஜூலை 29- மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவில் உபரி நீர் திறக்கப்பட்டு வருவதால் எடப்பாடி அடுத்துள்ள பூலாம் பட்டி காவேரி ஆற்றில் தீயணைப்பு துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி திங்களன்று நடைபெற்றது. சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள பூலாம்பட்டி காவிரி கரையோர பகுதி மக்களுக்கு கனமழை காரண மாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 120 அடி முழு கொள்ளளவை எட்ட உள்ள நிலையில், மாவட்ட நிர்வா கத்தின் சார்பில் ஒலிபெருக்கியின் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு விசைப்படகு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தீயணைப்பு துறை சார்பில் ஒத் திகை நிகழ்ச்சி நடைபெற்றது அப்போது காவிரி ஆற்றில் குளிக்கும்போது அல்லது காவேரியில் சிக்கிக் கொண் டாலோ எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து தங்களை பாது காத்து கொள்வது எப்படி என்றும் முதல் உதவி சிகிச்சை அளிப்பது குறித்தும் தீயணைப்பு துறை வீரர்கள் தத்ரூ பமாக பொதுமக்கள் முன்னிலையில் செய்து காண்பித் தனர்.
சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க உதகை நீதிமன்றம் அனுமதி
உதகை, ஜூலை 29- யூடியூப்பர் சவுக்கு சங்கரை, ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க உதகை நீதிமன்றம் அனுமதி அளித்தது. சென்னையை சேர்ந்த சவுக்கு சங்கர் என்பவர் சவுக்கு மீடியா என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவர், தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த சவுக்கு சங்கர், காவல் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரி வித்தார். இதுதொடர்பாக அவர் மீது கோவையை சேர்ந்த பெண் உதவி ஆய்வாளர் ஒருவர் சைபர் கிரைமில் புகார் அளித் தார். இப்புகாரின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்தனர். கோவையை தொடர்ந்து உதகை, சென்னை, சேலம், திருச்சி என அடுத்தடுத்து பெண் போலீஸார் சவுக்கு சங்கர் மீது புகார் அளித்தனர். இப்புகார்க ளின் பேரில் மேற்கண்ட மாவட்டங்களில் சவுக்கு சங்கர் மீது பெண்கள் வன்கொடுமை, அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் உதகையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆஜர் படுத்துவதற்காக திங்களன்று காலை உதகை நீதிமன் றத்துக்கு வளாகத்துக்கு சவுக்கு சங்கர் அழைத்து வரப் பட்டார். நீதிமன்ற வளாகத்தில் பத்திரிக்கையாளர்கள் குவிந்திருந்த நிலையில், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தா மல் வேனில் இருந்து அவரை இறக்காமலேயே போலீஸார் திரும்ப அழைத்துச் சென்றனர். இந்நிலையில், நீதிபதி சவுக்கு சங்கரை ஒரு நாள் போலீஸ் காவல் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதனால், அவரை காவலில் எடுத்து விசாரிக்க நீலகிரி குற்றப்பிரிவு போலீஸார் அழைத்து சென்றனர்.
பிஎஸ்என்எல் சிம் பெற பொதுமக்கள் அவதி
தருமபுரி ஜூலை - 29, தருமபுரி பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையத்தில் ஊழியர் பற்றாக்குறையி னால் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் சிம்கார்டு பெறுவதில் சிரமமமடைகின்றனர். இந்தியா முழுவதும் கடந்த ஒரு மாதமாக தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டத்திற்கு வழக்கமான தொகை யை விட கூடுதலாக விலையை உயர்த்தியு ள்ளனர். இதனால், அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர்கள் அரசு பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தொலைதொ டர்புக்கு தங்களது சிம்கார்டுகளை மாற்றி வரு கின்றனர். தருமபுரி மாவட்டத்தில் மட்டும் கடந்த 28 நாட்களில் 14 ஆயிரத்து 286 பேர் பிஎஸ்என் எல் தொலை தொடர்பு சிம்கார்டுகளை வாங்கி யுள்ளனர். அதுமட்டுமல்லாமல் வாடிக்கை யாளர்கள் சேவை மையத்தில் தினம் சிம் கார்டுகளை பிஎஸ்என்எல் தொலை தொடர் புக்கு மாறி வருகின்றனர். இந்நிலையில், தருமபுரி மாவட்ட பிஎஸ் என்எல் சேவை மையத்தில் 13 ஊழியர்கள் பணிபுரியும் இடத்தில் 4 ஊழியர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இதனால், வாடிக் கையாளர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே, பிஎஸ்என்எல் நிர்வாகம் தேவையான ஊழியர்களை பணியில் அமர்த்தி வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை அளிக்கவேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
காவல்துறையினரின் ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்
உதகை, ஜூலை 29- மக்கள் பிரச்சனைகளை மையப்ப டுத்தி நடைபெறும் ஜனநாயக ரீதியி லான போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுக்கும் போக்கு ஏற்புடை யதல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உதகை மாவட்டக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் உதகை மாவட்டக்குழு செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் நீலகிரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு அனுப்பி யுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதா வது, எங்கள் கட்சி மக்கள் பிரச்சனைக ளுக்காக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தொடர்ச்சியான போராட் டங்களை நடத்தி வருகிறது. இத்தகைய ஜனநாயக ரீதியிலான போராட்டங்க ளுக்கு காவல்துறை அனுமதி பெறுகிற போது, காவல்துறை அனுமதி மறுத்து வருகிறது. குறிப்பாக கூடலூர் டிஎஸ்பி அனைத்து போராட்டங்களுக்கும் அனு மதி மறுத்து வருகிறார். இத்தகைய அணுகுமுறை கட்சிக்கும், காவல்து றைக்குமான உறவில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. கூடலூர் டிஎஸ்பியின் எதேச் சிகார நடவடிக்கை என்பது அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள போராட்ட உரிமையை பறிப்பதாகும். எனவே, மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் இப்பிரச்சனையில் தலை யிட்டு ஜனநாயக உரிமைகளை பாது காத்து சுமுகமான முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி யுள்ளார்.
மயான ஆக்கிரமிப்பு – பட்டியலின மக்கள் மனு
மயான ஆக்கிரமிப்பு – பட்டியலின மக்கள் மனு பொள்ளாச்சி, ஜூலை 29- பொள்ளாச்சி, சிக்கலாம்பாளையம் கிராமத்தில் உள்ள பட்டியலின மக்களுக்கு சொந்தமான மயானத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றிட வேண்டும் என பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். அம்மனுவில், கோவை மாவட்டம், கிணத்துக்கடவு வட்டம், சொலவம்பாளையம் ஊராட்சி சிக்கலாம்பாளைம் குக்கிராமத்தில் பட்டியல் சமூகமான அருந்ததியர் மக்களுக்கு பாத்தியப்பட்ட மயானம் உள்ளது. இம்ம யானத்தை சிக்கலாம்பாளையம் மற்றும் வடபுதூர் ஊராட் சிக்கு உட்பட்ட அண்ணா நகர், எம்.ஜி.ஆர் நகர் ஆகிய அருந்ததியர் சமூக மக்கள் ஆண்டாண்டு காலமாக சுமார் ஐந்து தலைமுறைகளாக சடலங்களை புதைத்து வரு கின்றனர். தற்போது மயானத்தில் கனரக வாகனங்களை ஆத்து மீறி நிறுத்தி வைத்தும். மேலும், அந்த இடத்தில் குப்பைகள் கொட்டி குப்பை கிடங்காகவும் மாறியுள்ளது. இது சம்பந் தமாக பல்வேறு நிலைகளில் சமூக அமைப்புகள் சார்பாக மனு கொடுத்தும் சம்மந்தப்பட்ட துறை நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகின்றன. மேலும், 2023 ஆம் ஆண்டு கிணத்துக்க டவு வட்ட ஜமாபந்தி முகாமில் மனு அளித்தும் எவ்வித நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மேற்கண்ட சிக்கலாம்பாளையம் அருந்ததியர் மயான பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் கிராமத்திற்கு வந்து நேரடியாக பார்வையிட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றி மயானத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.
தடை செய்யப்பட்ட கல்குவாரிகளை மீண்டும் இயங்க அனுமதிப்பதற்கு எதிர்ப்பு
கோவை, ஜூலை 29- மதுக்கரை பகுதியில் தடை செய்யப்பட்ட கல்குவாரி களை மீண்டும் இயக்கும் நடவடிக்கையை கண்டித்து தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரி டம் புகார் மனு அளித்துள்ளனர். அம்மனுவில், கோவை மாவட்டம், மதுக்கரை பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 100 அடி ஆழம் வரை தோண்டி எடுக்கப்பட்ட கல்குவாரிகளை தடைசெய்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஏற்கனவே 100 அடி ஆழம் தோண்டப்பட்ட கல்குவாரிகளை தற்போது மீண்டும் இயக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின் றனர். இதனால் அங்குள்ள விவசாய குடும்பங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். இத்தகைய கல்குவாரிகளை இயக்க நடக்கும் முயற்சியை தடை செய்ய வேண்டும். புதிதாக அனு மதி கோரும் இத்தகைய கல்குவாரிகளுக்கு அனுமதி வழங் கக் கூடாது என தெரிவித்துள்ளனர்.