திருப்பூர், ஜன. 21 - 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து தொடர்ந்து 1 ஆண்டு காலமாக ஈஸ்வரன் கோயில் வீதி, மிஷின் வீதி சந்திக்கும் பகுதியில் குடிநீர் குழாய் உடைவதும், முழுமை யாக சீரமைக்கப்படாமல் மண்னை போட்டு மூடுவதும், மீண்டும் குடிநீர் குழாயிலிருந்து தண்ணீர் கசிவதும் தொடர் கதையாக உள்ளது. இதுவரை 8 முறை குழி தோண்டி பரா மரிப்பு பணி நடந்துள்ளது. இது குறித்து இப்பகுதி சுமைத் தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் கூறுகையில், “ஆப்ரேசன் சக்ஸஸ், பேசண்ட் அவுட்” என்பது போல் இங்கு நிலைமை உள்ளது. குடிநீர் வழங்கல் துறையின் போதிய அக்கறை இல்லாததுடன், திறமையற்ற நிர் வாகத்தால் மக்கள் வரி பணம் வீணடிக்கப்படுகிறது. திறமையான பொறியாளர்கள் திருப்பூர் மாநக ராட்சிக்கு கிடைக்கவில்லையா என்ற ஐயம் கூட ஏற்படுகிறது என்று கூறினர். மேலும் இப்பகுதியில் கான்கிரிட் ரோடு அமைக்கும் பணியும் நடைபெற உள்ளது. எனவே உட னடியாக நிர்வாகம் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது. உடனடி யாக குடிநீர் குழாய் உடைப்பை உரிய முறையில் சரி செய்து மீண்டும் நீர் கசிவு ஏற்படாதவாறு அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மிஷின் வீதி கிளை வலியுறுத்தி உள்ளது.