districts

img

பகுதி நேர நியாய விலைக்கடைகள் திறப்பு

தருமபுரி, மே 9- பருவதனஹள்ளி புதூர், சந்தைப்பேட்டை மற்றும் ஏர்ர கொல்லனூர் ஆகிய இடங்களில் கூட்டுறவுத்துறையின் சார் பாக புதிய பகுதி நேர நியாய விலை கடைகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் திறந்து வைத்தார். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பருவதன ஹள்ளி உள்ள முழுநேர நியாய விலை கடையில் 703 குடும்ப  அட்டைகள் இருக்கின்றன. அதிலிருந்து பிரித்து பருவதன ஹள்ளி புதூர் பகுதியில் 101 குடும்ப அட்டைகள் கொண்ட புதிய பகுதி நேர நியாய விலை கடையினையும், பென்னா கரம் வட்டம், மூங்கில்மடுவு  பகுதியில் உள்ள முழுநேர  நியாய விலை கடையில்708 குடும்ப அட்டைகள் இருக் கின்றன. அதிலிருந்து பிரித்துசந்தைப்பேட்டை பகுதியில்  96 குடும்ப அட்டைகள் கொண்ட பகுதி நேர நியாய விலை  கடையினையும், பென்னாகரம் வட்டம், ஏரிக்கரைசந்து பகுதியில் உள்ள முழுநேர நியாய விலை கடையில் 463  குடும்ப அட்டைகள் இருக்கின்றன. அதிலிருந்து பிரித்து ஏர்ரகொல்லனூர் பகுதியில் 156  குடும்ப அட்டைகள் கொண்ட புதிய பகுதி நேர நியாய விலை  கடையினையும் என மொத்தம் 3 புதிய பகுதி நேர நியாய விலை  கடையினை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத் தார். இதன்பின் பென்னாகரம் புதிய பேருந்து நிலையம் கட்டு மான பணிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவு றுத்தினார். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, சட்ட மன்ற உறுப்பினர்கள் ஜி.கே.மணி, எஸ்.பி.வெங்கடேஷ் வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம்.பெ.சுப்பிர மணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவ லர் ஜெயக்குமார், பென்னாகரம் பேரூராட்சி தலைவர் வீர மணி, துணைத்தலைவர் வள்ளியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.