districts

img

எதிர்ப்பை மீறி மனமகிழ் மன்றம் என்ற பெயரில் டாஸ்மாக் கடை திறப்பதா?

அவிநாசி, ஜூலை 15 –
அவிநாசி பேரூராட்சிக்கு உட்பட்ட சிந்தாமணி பேருந்து நிறுத்தம் அருகில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் டாஸ்மார்க் கடை திறக்கப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைய இருப்பதாக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தகவல் வெளியானது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவிநாசி பேரூராட்சி மன்றக் கூட் டத்தில் கவுன்சிலர்கள் தீர்மானம் நிறை வேற்றினர். மேலும் இப்பகுதிக்கு அருகில்  தேவாலயம், கோவில், மருத்துவமனை, பேருந்து நிறுத்தம், குடியிருப்பு உள்ளிட் டவை இருப்பதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஆட்சேபம் தெரி விக்கப்பட்டது.

இந்த நிலையில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பை மீறி மனமகிழ் மன்றம் என்ற  பெயரில் டாஸ்மார்க் கடை திறந்துள்ளனர். ஆதி தமிழர் பேரவை விடுதலைச் செல் வன், மணி உள்ளிட்டோர் தலைமையில் அந்த  அமைப்பினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கடையை உடனடியாக மூடக்கோரி மனு அளித்தனர். இம்மனுவை பெற்றுக் கொண்ட  அதிகாரிகளும் உரிய நடவடிக்கை மேற் கொள்வதாக தெரிவித்தனர். எனினும் இக் கடை அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி  வியாழக்கிழமை கடையை முற்றுகையிடப் போவதாகவும் இவ்வமைப்பினர் கூறியுள்ள னர்.