districts

img

தொடரும் காட்டுப்பன்றிகள் பிரச்சனை நடவடிக்கை எடுக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

உடுமலை, டிச.28- விளைநிலங்களை காட்டுப்பன்றி கள் தேசப்படுத்தி வருவதுடன், விவ சாயிகளையும் தாக்கி வருவது தொடர் கதையாக உள்ளது. விவசா யிகளின் பயத்தைப் போக்கும் வகை யில் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். உடுமலை மற்றும் மடத்துக்குளம்  மலைப்பகுதியில் இருந்து உணவு மற்றும் குடிநீர் தேவைகளுக்காக மலை அடிவார பகுதிகளுக்கு வரும்  காட்டு யானைகள் மற்றும் காட்டு  பன்றிகள் தென்னை மரம் மற்றும்  விளை பயிர்களை சேதப்படுத்தி வரு வது தொடர்கதையாக உள்ளது. கடந்த வாரம் ஜல்லிபட்டி கொங்குரர் குட்டை, பொன்னாலம்மன் சோலை, அமராவதி உள்ளிட்ட பகுதியில் 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் மற்றும் ஆழ்கு ழாய் கிணற்றில் உள்ள குழாய்களை  காட்டு யானைகள் சேதப்படுத்தி உள்ளன. மேலும் மலை அடிவாரத் தில் இருந்து 10 கிலோமீட்டர் வரை  சென்ற காட்டுப்பன்றிகள், தற்பொ ழுது 50 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் குடிமங்கலம் ஒன்றியப் பகுதி விளைநிலைங்களை சேத படுத்துவதுடன், விவசாயிகளைத் தாக்கி வருகிறது.  உடுமலை நகரப்ப குதி எல்லை ராகல்பாவி கிராமத்தில்  காளிமுத்து என்பவரின் விவசாய  நிலத்தில் பயிர் செய்த மக்காச்சோ ளப் பயிர்களை 50க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் முழுமையாக சேதப்படுத்தி உள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறு கையில்,  வனப் பகுதியில் இருந்த  காட்டுப்பன்றிகள் விளைநிலங்க ளுக்கு வந்து சேதப்படுத்துவதை தடுக்க வேண்டும். காட்டுப்பன்றி களை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். வனவி லங்குகள் ஏற்படுத்தும் சேதங்க ளுக்கு உரிய நேரத்தில் முழுமை யான நிவாரணம் கிடைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். கேரள அரசை போல் காட்டு பன்றிகளை அழிக்க நடவடிக்கை எடுக்க   வனத் துறையினர் தீவிரம் காட்ட வேண் டும். மேலும்  காட்டுப் பகுதியில் விலங் குகளுக்கு தண்ணீர் கிடைக்கவும், மலைப்பகுதியில் இருந்து விலங்கு கள் வெளியே வர முடியாத வகையில்  மலையடிவாரப் பகுதியில் தடுப்பு வேலி அல்லது அகழிகள் அமைக்க  வேண்டும். விலங்குகள் விளைநிலங் களுக்கு வராத வகையில் நடவ டிக்கை எடுக்க வேண்டும். வன விலங் குகளால் பாதிக்கப்பட்ட விவசாயி கள் மற்றும் விளை பயிர்களுக்கு உரிய இழப்பீடு உரிய நேரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றனர்.