ரசாயனத்தை மதுவில் கலந்து குடித்த ஒடிசா தொழிலாளி மரணம்
ஈரோடு, நவ. 1- கழிவறை ரசாயனத்தை மதுவில் கலந்து குடித்த ஒடிசா தொழிலாளி மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பன்சிதார் சிதா (38) என்பவர் ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டம் சுனந்தா கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பெருந்துறை யுஆர்சி எர்த் மூவர்ஸ் கம்பெனியில் லாரி கிளினராக வேலைக்குச் சேர்ந்துள்ளார். சிப்காட்டில் உள்ள ரங்கராஜ் ஸ்டீல்ஸ் என்னும் நிறுவனத் திற்கு ஒப்பந்த முறையில் வாகன இயக்குவதால் அந்நிறுவ னத்திற்குச் சொந்தமான லேபர்ஸ் கோர்ட்டர்ஸ் - ல் தங்கி வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 5 மாதங்களாக இவரது மனைவி யின் அக்கா கணவர் பாபு நகா என்பவர் இவருடன் தங்கி யுஆர்சி எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் லாரி கிளினராக வேலை செய்து வந்துள்ளார். கடந்த 30.10.22ஆம் தேதியன்று பாபு நாக வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். விசாரித்தபோது தான் மது அருந்தியதாகவும் அருகில் இருந்த கழிவறை கிளினரை தண்ணீர் என நினைத்து மதுவில் கலந்து குடித்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து பெருந்துறை ஆர்டிடி (அரசு மருத்துவக்கல்லூரி) மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி திங்களன்று உயிரிழந்தார். இதுகுறித்து சென்னிமலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சாலை விபத்தில் சிறுவன் பலி 3 வயது குழந்தை படுகாயம்
தாராபுரம், நவ. 1 - தாராபுரம் அருகே நிகழ்ந்த சாலைவிபத்தில் சிறுவன் பலி மேலும் 3 வயது குழந்தை படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறது. கோவை மாவட்டம் குன்னத்தூர் கோயில் தெருவை சேர்ந் தவர் பிரபு (45) இவர் குடும்பத்தினருடன் ஒரு நிகழ்ச்சிக்கு சென் றுவிட்டு கோவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். காரை ரவிச்சந்திரன் (57) ஓட்டி வந்தார். அப்போது தாராபுரம் ஒட்டன்சத்திரம் சாலையில் நல்லினி கல்லூரி அருகே பிரபு வின் கார் வந்தபோது எதிர் திசையில் வந்த மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிரபுவின் மகன் ஜீவா (16) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம டைந்த மகள் மகா (3) தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சையும் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத் தில் பிரபுவின் உறவினர் உமாமகேஸ்வரி தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய திண்டுக்கல்லை சேர்ந்த கார் ஓட்டுநர் ஆனந்தராஜ் (40) மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூச்சி கடித்து டாஸ்மாக் ஊழியர் பலி
அவிநாசி, நவ.1- திருப்பூர் மாவட்டம், சேவூர் அருகே பூச்சி கடித்ததில், மது பானக் கடை ஊழியர் திங்கள்கிழமை உயிரிழந்தார். அவிநாசி அருகே ராக்கியாபாளையத்தில் வசித்து வருப வர் கதிர்வேல் மகன் ராஜா(48). சேவூர் அருகே போத்தம்பா ளையம் டாஸ்மாக் கடையில் உதவி விற்பனையாளராக பணி புரிந்து வருகிறார். இவர் திங்கள்கிழமை போத்தம்பாளையம் டாஸ்மாக் கடை பணிக்கு வருவதற்காக இருசக்கர வாக னத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது ஒரு வகை பூச்சி சட்டைக்குள் கடித்துள்ளது. டாஸ்மாக் கடை முன்பு வந்து சட்டையை கழட்டி பார்க்கும் போது, பூச்சி சட்டைக்குள் இருந்துள்ளது. சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தவரை பணி யில் இருந்தவர்கள் மீட்டு கோவை மருத்துவனையில் சேர்த்த போது, பரிசோதித்த மருத்துவர்கள் ராஜா உயிரிழந்து விட்ட தாக தெரிவித்துள்ளனர். இது குறித்து சேவூர் காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வரு கின்றனர்.
திருப்பூர் ஆயுதப்படை காவலர் தற்கொலை
திருப்பூர், நவ. 1 - திருப்பூர் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணிபுரிந்து வந்த தேனி மாவட்டம் சுருளி பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (33). இவர் நல்லூரில் உள்ள ஆயுதப்படை பிரிவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். மனைவி மற்றும் குழந்தையுடன் நல்லூரில் உள்ள காவலர் குடியிருப்பில் குடி யிருந்து வந்தார். இந்நிலையில் ஞாயிறன்று தேவர் ஜெயந்தி பாதுகாப்பு பணிக்கு மதுரை மாவட்டத்திற்கு சென்றிருந்தார். திங்களன்று வீட்டிற்கு திரும்பினார். அப்போது கணவன் மனைவி இடையே வாக்குாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மனைவி மற்றும் குழந்தை வெளியே இருந்த சமயத்தில் ஈஸ்வரன் வீட்டின் உள்ளே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இத்தகவல் அறிந்து விரைந்து சென்ற நல்லூர் போலீசார் ஈஸ்வரன் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல் துறையினர் விசா ரித்து வருகின்றனர்.
லாரி ஓட்டுநரை கொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை
அவிநாசி, நவ. 1- அவிநாசி அருகே லாரி ஓட்டுநரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்து , அவரு டைய கைப்பேசி மற்றும் ரொக்கப் பணத்தை பறித்து சென்ற இருவருக்கு ஆயுள் தண் டனை விதித்து திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தஞ்சாவூர் மாவட்டம், காந்திநகரை சேர்ந்தவர் குமரேசன்(45) இவர் நாமக்கல் லில் உள்ள ஒரு தனியார் சிமெண்ட் நிறுவ னத்தில் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு, கேரள மாநிலம் கொச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். செப்.19ஆம் தேதி கொச்சி - சேலம் ஆறு வழிச் சாலையில் அவிநாசி அருகே வரும் போது லாரியின் டயர் வெடித்ததால், லாரியை ஓர மாக நிறுத்தி விட்டு, உரிமையாளருக்கு தக வல் கொடுத்துள்ளார். இதையடுத்து, மாற்று டயரை வேறு ஓட்டுனரிடம் கொடுத்து அனுப்பு வதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார். இரவு 11 மணிக்கு மாற்று டயருடன் வேறு ஓட்டுனர் வந்து குமரேசனை தொடர்பு கொண்ட போது கைப்பேசி அணைக்கப்பட் டிருந்து. இதையடுத்து அவிநாசி காவல் நிலையத் தில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற் கொண்ட போது, அவிநாசி அருகே பழங்கரை பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் குமரேசன் உடல் மீட்கப்பட்டது. தொடர் விசார ணையில், ஈரோடு விஜயமங்கலம் கூலிபா ளையத்தைச் சேர்ந்த சங்கர்(20), காங்கயம் பாரதி நகரைச் சேர்ந்த தீனதயாளன்(19) ஆகி யோரை கைது செய்தனர். அவர்களிடம் நடத் திய விசாரணையில் மது அருந்த பணம் இல் லாததால் , வழிப்பறியில் ஈடுபட்டதாகவும், அப்போது குமரேசனைத் தாக்கி கைப்பேசி மற்றும் ரூ.1500 ஆகியவற்றை பறித்துச் சென் றது தெரியவந்தது. இதையடுத்து அவிநாசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் திங்கள்கி ழமை விசாரணைக்கு வந்தது. இதில் கொலை குற்றத்திற்காக சங்கர் மற்றும் தீனதயாளன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை, ரூ.2000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
நூல் விலை கிலோவுக்கு ரூ.20 குறைந்தது
திருப்பூர், நவ. 1 – பின்னலாடை உற்பத்திக்கு பயன் படும் பருத்தி நூல் விலை நவம்பர் மாதத்தில் கிலோவுக்கு ரூ.20 குறைக் கப்பட்டுள்ளது. திருப்பூரில் ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங் கள் செயல்பட்டு வருகின்றன. பின்ன லாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருக்கும் பருத்தி நூல் விலை ஓராண்டுக்கு முன்பு கடந்த நவம்பர் மாதம் கடுமையாக உயர்ந்தது. தொடர்ந்து பல மாதங் களாக உயர்ந்த நிலையில் பின்ன லாடை உற்பத்தித் தொழில் மிகக்க டுமையாக பாதிப்பைச் சந்தித்து. இந்நிலையில் கடந்த சில மாதங் களாக நூல் விலை சற்று குறைந்து வருகிறது. எனினும் பல்வேறு கார ணங்களால் தொழில் துறை பாதிப் பைச் சந்தித்து வருகிறது. நூல் விலை குறைந்தாலும் எதிர்பார்த்த அள வுக்கு உற்பத்தி நடைபெறவில்லை. இந்நிலையில் நடப்பு மாதத்திற்கான (நவம்பர்) நூல் விலையை நூற்பா லைகள் செவ்வாயன்று வெளியிட் டன. இதில் நூல் விலை கிலோவுக்கு ரூ.20 குறைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த மாதம் கிலோவுக்கு ரூ.40 குறைந்த நிலையில் நடப்பு மாதத் திலும் ரூ.20 குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ 20-ஆவது நம்பர் கோம்டு நூல் ரூ.273-க்கும், 24- ஆம் நம்பர் ரூ.285-க்கும், 30-ஆம் நம்பர் ரூ.295-க்கும், 34-ஆம் நம்பர் ரூ. 315-க்கும், 40-ஆம் நம்பர் ரூ.335-க்கும், 20-ஆம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.265-க்கும், 24-ஆம் நம் பர் ரூ. 275-க்கும், 30-ஆம் நம்பர் ரூ. 285-க்கும், 34-ஆம் நம்பர் ரூ. 305-க்கும், 40-ஆம் நம்பர் ரூ.325-க்கும் விற் பனை செய்யப்படுவதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.
தற்கொலை முயற்சி
திருப்பூர், நவ.1- படியூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகள் ஆனந்தி (17). திருப்பூர் பழைய பஸ் நிலையம் அரு கில் பயிற்சி பெற்று வரும் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்தார். இதில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு மருத்து வமனைக்கு கொண்டு செல் லப்பட்டார்.
காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்
உதகை, நவ.1- குன்னூர் வெலிங்டன் போலீஸ் நிலையத்தில் கடந்த 2016, 2017 ஆம் ஆண்டு காலத்தில் தங்கம் என்பவர் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். அப்போது குற்ற வழக்குகள் குறித்து பதிவு செய்து, பணி மாற்றலாகினார். இந்த வழக்குகள் தொடர் பான விசாரணை குன்னூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை சம்பந்தமாக ஆஜ ராகும்படி அவருக்கு பலமுறை சம்மன் அனுப்பியும், கடந்த 6 மாதமாக அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் இது குறித்த விசாரணையின் போது குன்னூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி, காவல் ஆய்வாளர் தங்கத்திற்கு பிடி வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
நகர பகுதி சபா
நாமக்கல், நவ.1- நாமக்கல் நகராட்சி, எம்.ஜி.ஆர் காலனி சமு தாயக்கூடத்தில் நடைபெற்ற நகர பகுதி சபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங், நாடாளுமன்ற மாநி லங்களவை உறுப்பினர் கே. ஆர்.என்.ராஜேஷ்குமார் நாமக்கல் சட்டமன்ற உறுப் பினர் பெ.இராமலிங்கம் ஆகி யோர் பங்கேற்றனர். இதில், அரசின் அனைத்து துறை திட்டங்களினால் பயன் பெற்ற பயனாளிகள் குறித்து தகவல் தெரிவித்தல், இது நாள் வரை வரி செலுத்தா மல் நிலுவை வைத்துள்ளார் கள் பட்டியல் ஆகியவை குறித்த தகவல் தெரிவித்தல், தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக் களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகள் பதிவு செய் தல் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் குறித்து விவா திக்கப்பட்டது. இதில், நகர்மன்ற தலை வர் து.கலாநிதி, துணை தலைவர் செ.பூபதி மற்றும் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சிவன் கோவிலில் கந்த சஷ்டி கவசம் “கோமாளி அண்ணாமலை” - செந்தில்பாலாஜி
கோவை, நவ.1- சிவன் கோயிலில் முருகனின் கந்த சஷ்டி கவசத்தை பாடிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோமாளி என்பது முழுமை யாக தெரிகிறது. திமுகவினர் கோமாளிகளை பற்றி கவலைப்படாமல் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள் ளார். கோவை மாவட்டத்தில் புதிதாக திமுக வில் பொறுப்பேற்றுள்ள மாவட்டச் செயலா ளர் தளபதி முருகேசனின் மாவட்டச் செய லாளர் அலுவலகத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி ரிப்பன் வெட்டி உதகை, நவ.1- குன்னூர் வெலிங்டன் போலீஸ் நிலையத்தில் கடந்த 2016, 2017 ஆம் ஆண்டு காலத்தில் தங்கம் என்பவர் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். அப்போது குற்ற வழக்குகள் குறித்து பதிவு செய்து, பணி மாற்றலாகினார். இந்த வழக்குகள் தொடர் பான விசாரணை குன்னூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை சம்பந்தமாக ஆஜ ராகும்படி அவருக்கு பலமுறை சம்மன் அனுப்பியும், கடந்த 6 மாதமாக அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் இது குறித்த விசாரணையின் போது குன்னூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி, காவல் ஆய்வாளர் தங்கத்திற்கு பிடி வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். திறந்து வைத்தார். பின்னர் நடந்த பொதுக்கூட்ட மேடையில் பேசிய செந்தில் பாலாஜி, வருகின்ற நாடா ளுமன்றத் தேர்தலில் அனைவரும் ஒன்று பட்டு திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். மூன்றில் ஒரு பங்கு வாக்குகளை பெற்றாலும் வெற்றி பெற்று விடலாம். கோமாளி என்ற வார்த்தைக்கு பாஜகவின் தலைவர், அண்ணாமலை சரியான நபர் என் பதை அவரே நிரூபித்துக் காட்டி உள்ளார். கோட்டை ஈஸ்வரன் கோவிலில் கந்த சஷ்டி படித்திருக்கிறார். சிவன் கோவிலில் கந்த சஷ்டி கவசத்தை படித்திருக்கிறார் பாஜக தலைவர். இதிலிருந்து தெரிகிறது அவர் கோமாளி என்று, எனவே கோமாளிகளைப் பற்றி கவலைப்படாமல் பணியாற்றி அர சின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல் வதற்கு அனைவரும் பாடுபட வேண்டும், என்றார். இந்நிகழ்வில், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, பொள்ளாச்சி நாடா ளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம் மாவட்ட செயலாளர் கார்த்தி உட்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக கோவை மாநகராட்சி, 63 ஆவது வார்டில் உள்ளாட்சி தினத்தை ஒட்டி வார்டு சபை கூட்டம் செவ்வாயன்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டார் ஆட்சி யர் ஜி.எஸ்.சமீரன், மேயர் கல்பனா ஆனந்த குமார், மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். இதில் பொது மக்கள் தங்களது குறைகள் சம்பந்தமான மனுக்களை அமைச்சரிடம் வழங்கினர். கோவை மாநகராட்சியில் உள்ள நூறு வார்டுகளில் 846 இடங்களில் மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பொது மக்க ளின் குறைகளை கோரிக்கையாக பெற்ற னர்.