districts

img

முதுகலை, முனைவர் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை, ஏப்.20- தமிழ்நாடு வேளாண்மை பல் கலைக்கழகத்தில் முதுகலை, முனைவர் படிப்புகளுக்கான விண் ணப்பங்கள் பெறும் பணி துவங்கியுள்ள தாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித் துள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி கூறிய தாவது, தமிழ்நாடு வேளாண்மைப் பல் கலைக்கழகம் முதுநிலை பட்ட மேற் படிப்பு பயிலகம் வாயிலாக 11 கல்வி  வளாகங்களில் 33 துறைகளில் முது கலைப் படிப்பையும் 28 துறைகளில் முனைவர் பட்டப் படிப்பையும் வழங்கு கிறது. 2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான  முதுகலை மற்றும் முனைவர் படிப்பிற் கான மாணவர் சேர்க்கை செயல்முறை  துவங்கியுள்ளது. இந்தாண்டு மாண வர் சேர்க்கைக்கு இணையதளம்  (https://admissionsatpgschool.tnau.ac.in/) மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

 19.04.2023ஆம் முதல் தொடங்கி மே  மாதம் 15ஆம் தேதி (நள்ளிரவு 11.59  மணி) வரை மட்டுமே விண்ணப்ப தாரர்கள் இணையவழி வழியாக முது கலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். இளமறிவியல் (வேளாண்மை) மற்றும் அதன் சார்ந்த படிப்புகள் முடித்த  மாணவர்கள் முதுகலை பட்டப்படிப் பிற்கும், முதுகலை (வேளாண்மை) அல்லது தோட்டக்கலை, M.Tech (வேளாண் பொறியியல்) முடித்த  மாணவர்கள் முனைவர் பட்டப்படிப் பிற்கும், பட்டப்படிப்பு சான்றிதழ் (Provisional Degree Certificate) சமர்பிப்பதன் மூலமாகவும், தற்போது  இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் முந்தைய பருவ மதிப்பெண் சான்றிதழ் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். எனினும் பட்டப்படிப்பு சான்றிதழைச் சமர்பித்த பின்னரே மாணவர் சேர்க்கை  உறுதி செய்யப்படும். மேலும், விபரங்களுக்கு, முதுநிலை  மாணவர் சேர்க்கை (2023-24) குறித்த  தகவல் கையேட்டை படிக்குமாறு மாண வர்கள் அறிவுறுத்தப்பட்டு உரிய நேரத் தில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக் குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார் கள். மேலும், மாணவர் சேர்க்கை தொடர் பான ஐயப்பாடுகளுக்கு pgadmission @tnau.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.  நேரடியாக தொடர்பு கொள்ள 9489056710 என்ற அலைபேசி எண்ணை  தொடர்பு கொள்ளலாம் என தெரித் வித்தார்.