பள்ளிபாளையம், பிப்.9- விசைத்தறி தொழிலாளர்களுக்கு 75 சத விகித கூலி உயர்வு வழங்கக்கோரி குமார பாளையத்தில் நடைபெற்ற 3 ஆம் கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வியடைந்த நிலையில், அனைத்து தொழிற்சங்கத்தினர் கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டத்தை அறிவித் துள்ளனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத் தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கள் இயங்கி வருகிறது. இந்நிலையில், 75 சதவிகித கூலி உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர் கள், கடந்த ஒரு வார காலமாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இத னிடையே விசைத்தறி தொழிற்சங்க நிர்வாகி கள், விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை குமாரபாளை யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புத னன்று குமாரபாளையம் காவல் ஆய்வா ளர் ரவி முன்னிலையில் நடைபெற்றது. மூன் றாம் கட்டமாக நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையில் முடிவுகள் ஏற்படாமல், தோல் வியில் முடிவடைந்தது. இதுகுறித்து தொழிற்சங்கத்தினர் கூறு கையில், வரும் பிப்.10 ஆம் தேதியன்று (இன்று) சேலம் தொழிலாளர் துறை அலுவல கத்தில் கூலி உயர்வு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அந்த பேச்சுவார்த்தை யில் உடன்பாடு ஏற்படாத பட்சத்தில், பிப்.11 ஆம் தேதியன்று (நாளை) குமாரபாளை யத்தில் பல்வேறு இடங்களில் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டத்தை மேற்கொள்ள உள் ளதாக தெரிவித்தனர். ஒரு வார காலமாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கஞ்சி தொட்டி திறக்கப் படும் என்கிற அறிவிப்பு குமாரபாளையம் வட் டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.