districts

img

இன்று தொழிலாளர்கள் திரும்புகின்றனர்: திருப்பூரில் நாளை இயல்பு நிலை திரும்பும்

திருப்பூர், ஜன.18- பொங்கல் பண்டிகை விடுமுறையில் சொந்த ஊர்களுக்குச் சென்ற தொழிலா ளர்கள் ஞாயிறன்று திருப்பூருக்குத் திரும்பி  வருவார்கள், எனவே திங்களன்று முதல்  பனியன் நிறுவனங்கள் வழக்கம் போல்  செயல்படத் தொடங்கும் என்று பனியன்  நிறுவன உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்ற னர். திருப்பூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் இயங்கு கின்றன. 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில்,  வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங் களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் பணி யாற்றி வருகின்றனர். பண்டிகை காலங்களில்  தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக் கம். இந்த ஆண்டு தமிழர் திருநாள் பொங்கல்  பண்டிகையை முன்னிட்டு ஜன.11 சனி, ஞாயிறு தொடங்கி, ஒரு வாரம் வரை தொடர்  விடுமுறை விடப்பட்டிருந்தது. இதையொட்டி  திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பணி யாற்றி வந்த தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குப் பண்டிகையைக் கொண்டாடப் புறப்பட்டு சென்றனர். பெரும் பாலான தொழிலாளர்கள் சொந்த ஊர்க ளுக்குச் சென்றுவிட்ட நிலையில், பனியன்  நிறுவனங்கள் குறைந்த அளவிலான தொழி லாளர்களைக் கொண்டு இயக்கப்பட்டன. மீண்டும் பரபரப்பாக காணப்படும் திருப்பூர்  கடந்த ஒரு வாரமாக அதிக மக்கள்  நடமாட்டமின்றி, பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்ட திருப்பூர் மாநகரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியது. குறிப்பாக ஆடை  விற்பனைக்கு பெயர் பெற்ற காதர்பேட்டை யில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சில்லறை மற்றும் மொத்த ஆடை விற்பனை கடைகள் உள்ளன. இந்த கடைகள் பொங்கல் பண் டிகை தொடர் விடுமுறை காரணமாக மூடப் பட்டிருந்தன. இந்நிலையில் விடுமுறை முடிந்து வெள் ளியன்று பெரும்பாலான நிறுவனங்கள் திறக் கப்பட்டன. சனியன்று பெரும்பாலான சில் லறை விற்பனை கடைகளும் திறக்கப்பட்டு  இருந்தன. கடந்த வாரம் பொதுமக்கள் நட மாட்டம் குறைந்ததால் குமரன் ரோடு,  பல்லடம் ரோடு, பி.என்.ரோடு போன்ற  முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத் தும் பெருமளவில் குறைந்து காணப்பட்டன. தற்போது விடுமுறை முடிந்ததையொட்டி மீண்டும் சாலைகளில் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. இதுகுறித்து வாகன நிறுத்துமிடம் உரி மையாளர் கூறுகையில், தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு செல்லும் தொழி லாளர்கள் தங்கள் இருசக்கர மற்றும் நான்கு  சக்கர வாகனங்களை ரயில் நிலையம் மற்றும்  பஸ் நிலைய வாகன நிறுத்துமிடத்தில் நிறுத் திவிட்டு ஊருக்குச் செல்வது வழக்கம். பொங் கல் பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து ஒரு  வாரம் விடுமுறை என்பதால், வாகன நிறுத்தங் கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாக னங்களால் நிரம்பி வழிகிறது. பண்டிகை முடிந்து தொழிலாளர்கள் திரும்பும்போது தான் இங்கு வாகனங்கள் எண்ணிக்கை குறை யும். திருப்பூரில் இருந்து சொந்த ஊர் சென்ற  தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமை மீண் டும் திருப்பூர் திரும்புவார்கள் என எதிர்பார்க் கிறோம். அதன்பிறகே திருப்பூர் மாநகர் மீண் டும் பரபரப்பாக இயங்கத் தொடங்கும். பனியன் நிறுவன உரிமையாளர் ஒருவர்  கூறுகையில், திருப்பூரில் உள்ள பனியன்  நிறுவனங்களில் பெரும்பாலும் வெளி  மாவட்ட மற்றும் வெளி மாநில தொழிலா ளர்களே அதிக அளவில் பணியாற்றி வரு கின்றனர். இந்நிலையில் பொங்கல் பண்டி கையை முன்னிட்டு கடந்த வாரம் முதல் பள் ளிகள், தொழில் நிறுவனங்கள் உட்பட அதனை சார்ந்த தொழில்களில் பணியாற் றும் தொழிலாளர்கள் பொங்கல் பண்டிக்கை  கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்று விட் டனர். கடந்த வியாழக்கிழமையுடன் விடு முறை முடிந்தாலும், இன்னும் தொழிலாளர் கள் முழுமையாக திருப்பூர் திரும்பவில்லை. ஞாயிற்றுக்கிழமைதான் திரும்புவார்கள். இது ஏற்கனவே எதிர்பார்த்ததுதான், சிறு பனியன் கம்பெனிகள் ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை விட்டுள்ளனர். பெறும் நிறு வனங்கள் வெள்ளிக்கிழமை முதல் இயங்கத்  தொடங்கிவிட்டன. இருப்பினும் திருப்பூரில் தங்கிப் பணிபுரியும் வெளிமாநில தொழிலா ளர்களை கொண்டு பனியன் நிறுவனங்கள் இயக்கப்படுகின்றன. வெளிமாநில தொழிலா ளர்களை மட்டுமே வைத்து தேவையான அள விற்கு உற்பத்தி செய்ய முடியாது. தமிழ்நாட் டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து  திருப்பூரில் பணிபுரியும் தொழிலாளர்கள் திரும்பி வந்தால்தான், பனியன் நிறுவனங் கள் முழுமையாக செயல்பாட்டிற்கு வரும் என்றனர்.