districts

img

கடும் குளிர்: உதகை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உதகை, ஜூலை 5- தென்மேற்கு பருவ மழை தீவி ரம் அடைந்துள்ள நிலையில், உதகை யில் கடும் குளிர் காரணமாக பொது மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம்  முதல் வாரத்தில் தொடங்கி செப்டம் பர் மாதம் வரை தென்மேற்கு பருவ மழை பெய்யும். இந்த வருடம் தென் மேற்கு பருவமழை சற்று தாமத மாக தொடங்கியது.  இதற்கிடையே தென்மேற்கு பருவலை தீவிரம் அடைந்து உள்ள நேரத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரண மாக நீலகிரி உள்பட தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வரு கிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் பனிமூட்டம் காணப்படு வதால் கடும் குளிர் நிலவுகிறது. இதற்கு இடையே நாள் முழுவதும் சாரல் மலையும் அவ்வப்போது லேசாக கனமழையும் பெய்து வரு கிறது. மஞ்சூர் பகுதியில் இடி மின்ன லுடன் பலத்த மழை பெய்ததால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங் கள் செல்பவர்களின் கடும் அவதி அடைந்தனர். இதனால் பொது மக்க ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது.  தொடர் மழை காரணமாக சாலை கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஆங் காங்கே சாலைகளில் விழும் மரங் களை வெட்டி அகற்றும் பணியில் தீய ணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கன மழை ஏற்பட்டால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாகவும், நிவா ரண முகாம்கள் தயாராக இருப்பதாக வும் மாவட்ட நிர்வாகம் தெரிவித் துள்ளது.