கோவை, ஜூலை 22- கேரளாவில் நிபா வைரஸ் தாக்கு தலுக்கு சிறுவன் ஒருவர் பலியான நிலை யில், தமிழக - கேரள எல்லை பகுதிக ளில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்கா ணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவின் கோழிக்கோடு மாவட் டத்தில் 14 வயது சிறுவன் ஒருவர் நிபா வைரஸ் தாக்குதலுக்கு பலியான சம்ப வம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தமிழக - கேரள எல்லை பகுதிகளான வாளையார், கன்னியாகுமரி, தேனி போன்ற இடங்களில் சுகாதாரத்துறை யினர் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தையொட்டி இருக்கும் தமி ழக கேரளா எல்லை பகுதிகளில் சுகாதா ரத் துறையினர் திங்களன்று காலை முதல் கண்கா ணிப்பை தீவிரப்ப டுத்தியுள்ளனர். வாளையார் சோதனை சாவடி யில் முழு கவச உடை அணிந்த தமிழக சுகாதாரத் துறை ஊழியர் கள், பேருந்து மற் றும் கார், வேன் உள்ளிட்ட வாகனங் களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவிலிருந்து வருபவர்களுக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட பாதிப்புகள் ஏதேனும் இருக்கிறதா என ஆய்வு மேற்கொண்ட பின்னரே அனுமதிக்கின் றனர். கேரளாவிலிருந்து கோவை மாவட்டத்திற்குள் வரும் 13 வழித்த டங்களிலும் சுகாதார துறையினர் சோத னையில் ஈடுபட்டு வருகின்றனர். காய்ச் சல், சளி உள்ளிட்ட பாதிப்புகளுடன் வரு பவர்களை மருத்துவமனைக்கு அழைத் துச் செல்ல 108 ஆம்புலன்ஸ் வாகன மும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள் ளது. கேரள மாநிலத்தில் தற்பொழுது ஐந்தாவது முறையாக நிபா வைரஸ் காய்ச்சல் தாக்கம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.