districts

சீராணம்பாளையத்தில் புதிய ரேசன் கடை - அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்

ஒன்றிய இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வெர்மா தகவல்

கோவை, மே 5- சிறு, குறு தொழில்களின் மூலப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருவதாக ஒன்றிய  சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை  இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வெர்மா தெரிவித்துள்ளார். கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தேசிய கயிறு வாரியம் சார்பில் தேசிய கயிறு மாநாடு வியாழனன்று துவங்கி யது. இருநாட்கள் நடைபெறும் இம் மாநாட்டில் தமிழகம், கேரளா, கர்நா டகா, ஆந்திரா உள்ளிட்ட நாட்டின் பல் வேறு பகுதிகளில் கயிறு சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வரும் தொழில் முனைவோர் கலந்து கொண்டுள்ள னர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச் சர் நாராயண் ரானே, இணை அமைச் சர் பானு பிரதாப் சிங் வெர்மா, தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மற் றும் நகர்புற வீட்டு வசதி வாரிய துறை  அமைச்சர் தா.மோ.அன்பரசன், அசாம் மாநில தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் சந்திர மோகன் பட்டோ வாரி, கயிறு வாரிய தலைவர் குப்பு ராமு ஆகியோர் பங்கேற்று தொழில் முனைவோருடன் கலந்துரையாட உள்ளனர். முன்னதாக, இந்நிகழ்வில் பங் கேற்ற ஒன்றிய இணையமைச்சர் பானு பிரதாப் சிங் வெர்மா செய்தியாளர்களி டம் கூறுகையில், தமிழகத்தில் உள்ள  27 கயிறு கூட்டமைப்புகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 186 இடங் களில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 60 சதவீதம் தமிழகத் தில் செயல்படுத்துகிறது. நாட்டில் இது வரை நிலக்கரி தட்டுப்பாடு இல்லை. அதேநேரம், தட்டுப்பாடு அபாயம் ஏற் பட்டால் சிறு குறு தொழில்களை பாது காக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப் படும். இதேபோல், சிறு குறு தொழில் களின் மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வரு கிறது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என் றார்.

ஜாப் ஆர்டருக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்திடுக

பி.ஆர்.நடராஜன் எம்.பி., வலியுறுத்தல் கோவையில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க வந் துள்ள ஒன்றிய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை  அமைச்சர் நாராயண் ரானே, இணை அமைச்சர் பானு பிர தாப் சிங் வெர்மா ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு  செல்லும் வகையில் பி.ஆர்.நடராஜன் எம்.பி., வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,    கோவையில் உள்ள வெட்கிரைண்டர் தொழில் மற் றும் சிறு குறு தொழில்களை பாதுகாக்க வேண்டும் என் றால் ஜாப் ஆர்டருக்கு ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்பட வேண்டும். 12 சதவிகிதம் ஜிஎஸ்டி வரியை விதித்துவிட்டு இத்தொழிலை நாங்கள் பாதுகாக்கிறோம் என்று சொல் வது எந்த வகையிலும் இந்த தொழில்களையும், இதனை நம்பியுள்ள தொழிலாளர்களையும் பாதுகாக்க உத வாது. ஜாப் ஆர்டருக்கான ஜிஎஸ்டியை முழுமையாக  ரத்து செய்ய வேண்டும். இதுகுறித்து நாடாளுமன்றத்தில்  பலமுறை குரல் கொடுத்தும் ஒன்றிய அரசு செவிசாய்க்க வில்லை. தற்போது கோவை வந்திருக்கும் தொழில் துறை சார்ந்த ஒன்றிய அமைச்சர்கள், கோவை தொழில் அமைப்பினரின் வேதனை குரலை உள்வாங்கிக் கொண்டு கோவை தொழில்கள் மட்டுமல்லாது நாடு  முழுவதும் உள்ள சிறு, குறு தொழில்களை பாதுகாக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்வ தாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.