districts

img

உடுமலையில் ஆய்வக விலங்குகளின் நலம், ஊட்டச்சத்து பற்றிய தேசிய கருத்தரங்கம்

திருப்பூர், ஜூலை 26- உயிரியல் மருத்துவத்தில் ஆய் வக விலங்குகளின் நலம் மற்றும் ஊட் டச்சத்து பற்றிய தேசிய கருத்தரங் கம் வியாழனன்று உடுமலைப் பேட்டை கால்நடை மருத்துவக் கல் லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத் தில் நடைபெற்றது. உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் பா. குமாரவேல் தலைமையில் நடை பெற்ற இக்கருத்தரங்கத்தில், பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டி.எம்.சுப்பாராவ் கலந்து கொண்டு, கருத்தரங்கு இதழை வெளியிட்டு ஆய்வக விலங்குகள் பற்றிய அவரது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கால்நடை நலக் கல்வி இயக்குனர் சி. சவுந்தர்ராஜன், இந்தியாவின் ஆய் வக விலங்குகளின் வல்லுநர்கள் குழு மத்தின் செயலாளர் ஆர்.கே.சக்திதே வன், அபுதாபி இந்திய தூதரகத்தில் ஆலோசகராக பணிபுரியும் மருத்து வர் ஆர்.பாலாஜி உட்பட பல்வேறு  துறையின் வல்லுநர்கள் இக்கருத் தரங்கில் சிறப்புரையாற்றினார்கள். இதையடுத்து, ஆராய்ச்சி முடிவு கள், இரண்டு தொழில்நுட்ப அமர்வு கள் மற்றும் மின்னணு சுவரொட்டி அமர்வில் விவரிக்கப்பட்டது. சிறந்த  ஆராய்ச்சி முடிவுகளுக்கு சான்றிதழ் கள் வழங்கப்பட்டது.  இதில், 24 கல்லூரிகளில் இருந்து  176 பேராசிரியர்கள், ஆராய்ச்சியா ளர்கள் மற்றும் மாணவர்கள் பங்கு பெற்றனர். உயிரியல் மருத்துவ  ஆராய்ச்சியில் ஆய்வக விலங்கு களை பயன்படுத்தும்போது மாற்று தல், குறைத்தல் மற்றும் செம்மைப்ப டுத்துதல் என்ற கொள்கைகளை பின் பற்ற வேண்டும். மேலும் பொருத்த மான ஆய்வு நெறிமுறைகளுக்கான பொருத்தமான ஊட்டச்சத்து மாதிரி  பின்பற்ற வேண்டும் என கருத்தரங் கில் பரிந்துரைக்கப்பட்டது. உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கால்நடை உணவியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் சி.கதிர்வேலன் இக்கருத்தரங்கை ஒருங்கிணைத்து வரவேற்றார். முடிவில் உதவிப் பேராசிரியர் ஆர்.பாலமுருகன் நன்றி கூறினார்.