தருமபுரி, ஜூலை 25- தில்லியில் நடைபெறும் தேசிய அளவிலான கராத்தே போட்டிக்கு தருமபுரி மாணவ-மாணவியர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். தருமபுரியில் தென்னிந்திய கராத்தே அசோசியேசன் தலைவர் கிராண்ட் மாஸ்டர் கியோ சி நடராஜ் முன்னிலை யில் கராத்தே பெல்ட் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மாணவ, மாணவியர் கலந்து கொண்டு கட்டா டீம், கட்டா மற்றும் குமித்தே பிரிவுகளில் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு கிராண்ட் மாஸ் டர் கியோஷி நடராஜ், கிருஷ்ணகிரி ஷிகான் மாரியப்பன் ஆகி யோர் பெல்ட் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். தொடர்ந்து, கடந்த மாதம் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் கள் தில்லியில் நடைபெறும் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பங்கு கொள்ள இருப்பதாக தென்னிந்திய கராத்தே அசோசியேஷன் தலைவர் நடராஜ் தெரிவித்தார்.