districts

img

தேசிய வாக்காளர் தினம்

கோவை, ஜன.25-  கோவை மாவட்ட ஆட்சிய‌ர் அலுவ‌ல‌க‌த்தில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலு வலரும், மாவட்ட ஆட்சியருமான ஜி.எஸ்.ச‌மீர‌ன் முன்னிலை யில் வாக்காள‌ர்க‌ள் உறுதிமொழி ஏற்க‌ப்ப‌ட்ட‌து.  இதில், இந்திய‌ குடிம‌க்களாகிய‌ நாங்க‌ள், ஜ‌ன‌நாய‌ க‌த்தின் மீது உறுதியான‌ ந‌ம்பிக்கை கொண்டு, ந‌ம் நாட்டின்  ஜ‌ன‌நாய‌க‌ ம‌ர‌புக‌ளையும், சுத‌ந்திர‌மான‌, நியாய‌மான‌ ம‌ற் றும் அமைதியான‌ தேர்த‌ல்க‌ளின் கண்ணிய‌த்தையும் நிலை நிறுத்துவோம். ஒவ்வொரு தேர்த‌லிலும், எவ்வித‌ அச்ச‌மின்றி ம‌த‌ம், இன‌ம், சாதி, ச‌மூக‌ தாக்க‌மின்றியும் அல்ல‌து வேறு  ஏதேனும் தூண்டுத‌ல்க‌ளின்றியும் வாக்காளிப்போம் என்றும்  உறுமொழி ஏற்க‌ப்ப‌ட்ட‌து.  இதன்பின், அர‌சு ப‌ள்ளிகளில் நடைபெற்ற பேச்சுப் போட்டி, க‌ட்டுரை போட்டியில் வெற்றி  பெற்ற‌ மாண‌வ‌, மாண‌விய‌ர்க‌ளுக்கு மாவ‌ட்ட‌ ஆட்சிய‌ர் ஜி.எஸ்.ச‌மீர‌ன் சான்றித‌ழ்க‌ளை வ‌ழ‌ங்கினார்.