நாமக்கல், ஜூலை 29- கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பி டிப்பு பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிற நிலையில், நாமக் கல் மாவட்டம், பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் மாவட்ட ஆட்சியார் உமா காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் ஆய்வு மேற்கொண்டார். மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக ஞயிறன்று பிற்ப கல் 3 மணிக்கு சுமார் 12,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் அதி களவில் திறக்கப்படுவதால், வரு வாய்த்துறை, நீர்வளத்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள் தொடர்ந்து மேற்கொள் ளப்பட்டு வருகிறது. மேலும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கைகள் தொடர்ந்து மேற் கொள்ளப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்குத் தொடர்ந்து தண்ணீர் அதிக அளவில் வந்து கொண்டிருப்பதால் நாமக்கல் மாவட்டத்தில் காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறி வுறுத்தப்பட்டு வருகிறது. ஆபத்தை விளைவிக்கும் வகை யில் யாரும் நீர் நிலைகளுக்கு அரு கில் செல்வதோ, புகைப்படங்கள் எடுப்பதோ கூடாது என ஆட்சியர் எச்சரித்துள்ளார். மேலும், பொதுமக்கள், நாமக் கல் மாவட்டத்தில் குமாரபாளை யம், பள்ளிபாளையம், ஜேடர்பா ளையம் அணைப்பகுதி, வெங் கரை, வேலூர், அணிச்சம்பாளை யம், மோகனூர், ஒருவந்தூர் ஆகி யற்றில் உள்ள தாழ்வான பகுதிகள், மற்றும் புதிய கதவணை பகுதி, நீர் வழித்தடங்கள், ஜேடர்பாளையம் அணைப்பூங்கா உள்ளிட்ட காவிரி கரையோரப்பகுதிகளில் சிறுவர் கள் மற்றும் பொதுமக்கள் நீர் நிலை களுக்கு அருகில் செல்வதை முற்றி லும் தவிர்த்திட வேண்டும் . மேலும், பள்ளிபாளையம் மற் றும் குமாரபாளையம் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகளில் பொதுமக்கள் வசிக்கும் இடங்க ளில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பொதுமக்களை தங்க வைப்பதற்காக தனியார் திரு மண மண்டபம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக ளில் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சே.சுகந்தி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், திங்களன்று, நாமக்கல் மாவட்டத்தின் காவிரி கரையோர பகுதிகளில் வெள்ள பாதிப்பு நிலை இருப்பதால், பள்ளி பாளையம், குமாரபாளையம், பர மத்தி வேலூர் உள்ளிட்ட இடங்க ளின் வெள்ள தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம், வட்டாட்சியர் அலுவலகத்தில், வட் டாட்சியர் சிவக்குமார் தலைமை யில் நடைபெற்றது. இந்த கூட்டத் தில் மாவட்ட வழங்கல் துறை அலு வலரும், மண்டல அலுவலருமான முத்துராமலிங்கம் உள்ளிட்ட அதி காரிகள் பங்கேற்றனர். கர்நாடகா நீர் பிடிப்பு பகுதிக ளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, கர்நாடகா மாநில அணைகளில் நீர் நிரம்பியுள்ள தால், அங்கிருந்து காவிரி ஆற்றில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு சுமார் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டுள் ளதால், இதன் காரணமாக காவிரி கரையோரம் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட் டுள்ளது. இதனை தொடர்ந்து நீர் வரத்து குறித்து கண்காணிப்பு களை மேற்கொண்டுள்ளதாக அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.