districts

img

ஊழியர் விரோதப்போக்கில் நகராட்சி நிர்வாகம்

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் சேலம், ஆக.30- ஊழியர் விரோதப்போக்கை கடை பிடித்து வரும் சேலம் நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைகளை கண்டித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், நரசிங்கபுரம் நகராட்சி யில் மோட்டார் இயக்குபவராக பணியாற்றும் நா.செந்தில்குமார் மற்றும் கிருஷ்ணகிரி நக ராட்சியில் மின் கம்பி உதவியாளராக பணிபுரி யும் கோ.வெங்கடேசன் ஆகிய இருவர் மீதும் ஊழியர் விரோத நடவடிக்கையாக எடுக்கப் பட்ட, விடுப்பு ஆணையினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மேலும், அவர்கள் பணிபுரிந்த நகராட்சியிலேயே மீண்டும் பணி  வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், சேலம் சத்தி ரம் பகுதியிலுள்ள நகராட்சிகளின் நிர்வாக  மண்டல இயக்குநர் அலுவலகம் முன்பு பெருந் திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட் டத் தலைவர் நா திருவரங்கன் தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் சுரேஷ், மாவட்டப் பொருளாளர் செல் வம், தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலு வலர் சங்க மாநில பொதுச்செயலாளர் மு. தாமோதரன், மாநிலப் பொருளாளர் ரா. சுவாமிநாதன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி, அரசினர் தொழிற்பயிற்சி அலுவலர் சங்க மாநிலப் பொருளாளர் நா.திருநாவுக்கரசு, அனைத்து சங்க கூட்டமைப்பின் தலைவர் இல.கலைமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.