districts

img

சிபிஎம் கூடலூர் ஏரியாக் கமிட்டி செயலாளராக எம்.ஆர்.சுரேஷ் தேர்வு

உதகை, அக். 14- மார்க்சிஸ்ட் கட்சியின் கூட லூர் ஏரியாக் கமிட்டி செயலாள ராக எம்.ஆர்.சுரேஷ் தேர்வு செய் யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் நீலகிரி மாவட்ட கூடலூர் ஏரியாக் கமிட்டியின் 12 ஆவது மாநாடு மண்வயலில் ஏ.கே.பாலன் நினைவரங்கத்தில் ஞாயிறன்று நடை பெற்றது. மாநாட்டு கொடியினை கே.கே.ஜோஸ் ஏற்றி வைத்தார். மாநாட்டிற்கு கே. ஷாகுல், ஷோபா மற்றும் அரவிந்தன் ஆகி யோர் தலைமை ஏற்றனர். சி.கே.மணி வர வேற்று பேசினார். மார்க்சிஸ்ட் கட்சியின்  மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் மாநாட்டை துவக்கிவைத்து உரையாற்றி னார். செயலாளர் வேலை அறிக்கை முன் வைத்து இறுதி செய்யப்பட்டது.  இதில், கூடலூர் தாலுகாவில் தலை முறை தலைமுறையாக விவசாயம் செய்து வரும் நிலங்களையும், வீடுகளையும் அரசு  கையகப்படுத்தும் நடவடிக்கையை உடன டியாக கைவிட வேண்டும், கூட லூர் பஜாரின் சாலையோரங் களில் வாகனங்கள் நிறுத்தி  போக்குவரத்து நெரிசலை ஏற் படுத்துபவர்கள் மீது நடவ டிக்கை எடுத்து, போக்குவ ரத்தை சீர் செய்ய வேண்டும்.  குண்டும் குழியுமான சாலைக ளில் ஏற்படும் விபத்துகளை  தவிர்க்க சாலைகளை சீரமைக்க வேண்டும்  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டது.  மாநாட்டில் 11 பேர் கொண்ட கூடலூர் ஏரியாக் கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. கூட லூர் ஏரியாக் கமிட்டி செயலாளராக எம்.ஆர். சுரேஷ் தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொது மாநாட் டில் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.ஏ. பாஸ்கரன், விவசாயிகள் சங்க செயலாளர் ஏ. யோகண்ணன் மற்றும் எம்.ஏ.குஞ்சு முகம் மது உள்ளிட்டோர் உரையாற்றினர். முடி வில், டி.எம்.சுரேஷ் நன்றி கூறினார்.