districts

img

ஊத்துக்குளியில் மருத்துவ முகாம் எம்.பி.க்கள் பங்கேற்பு

திருப்பூர், நவ.20- திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி நகர் ஆரம்பப்பள்ளி யில் ஞாயிறன்று வட்டார காங்கிரஸ் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. திருப்பூர், ஈரோடு எம்.பி.க்கள் இந்த முகாமை தொடங்கி வைத்தனர். ஊத்துக்குளி வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள்  தலைவர்கள் என்.கே.கிருஷ்ணசாமி, எஸ்‌.என்.நாச்சிமுத்து, எம்.சி.பழனிசாமி ஆகியோர் நினைவாக ஞாயிறன்று ஊத்துக்குளி நகர் ஆரம்ப பள்ளி வளாகத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமை திருப்பூர் எம்.பி., கே.சுப்பராயன், ஈரோடு எம்.பி., அ.கணேசமூர்த்தி ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், காங்கிரஸ்  மாவட்ட தலைவர் மக்கள் ராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.பழனிச்சாமி, முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் சரவணன், வட்டார தலைவர் சர்வேஸ் வரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், கொமதேக மாவட்ட இணை செய லாளர் சீனிவாசமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சர வணன், ஊத்துக்குளி பேரூராட்சி 7ஆவது வார்டு கவுன் சிலர் கு.சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.