கோவை, டிச.14- கோவையில் பரவலாக பெய்த மழை யால், வடகோவை சுரங்கபாதையில் தேங் கிய மழைநீரால் வாகனம் ஓட்டிகள் அவதி யடைந்தனர். கோவை மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களாக பரவலாக சாரல் மழை பெய்து வரு கிறது. இந்நிலையில், வெள்ளியன்று இரவு முழுவதும் காந்திபுரம், உக்கடம், டவுன் ஹால், சிவானந்தாகாலணி, உள்ளிட்ட பகுதி களில் மழை கொட்டித் தீர்த்தது. இதில் காந்திபுரம் - மேட்டுப்பாளையம் சாலையை இணைக்ககூடிய வடகோவை சுரங்கப்பாதை யில் மழைநீர் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். தினமும் ஏராளமான வாகனங்கள் செல்லக்கூடிய இந்த சுரங்க பாதையில் மழை நீர் தேங்கி யதால், இருசக்கர வாகனத்தில் செல்பவர் கள் தடுமாறி செல்லும் நிலைமை ஏற்பட்டுள் ளது. மேலும், அவ்வழியாக வந்த இரு சக் கர வாகன ஓட்டிகள் மீண்டும் திரும்பிச் சென்றனர். உடனடியாக கோவை மாநக ராட்சி நிர்வாகம் சுரங்கப்பாதையில் உள்ள சாலை மழை நீரை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ள னர்.