districts

img

பெரும்பாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்துணவில் அழுகிய முட்டை விநியோகம்

பென்னாகரம்.பிப்.2- பெரும்பாலை அரசு மேல் நிலைப் பள்ளியில் சத்துணவில்  மாணவர்களுக்கு அழுகிய முட்டை கள் விநியோகிக்கப்பட்டதை கண் டித்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். தருமபுரி மாவட்டம், பென்னா கரத்தை அடுத்த பெரும்பாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் மதிய உணவை சாப்பிட்ட மாணவ, மாண விகளுக்கு வழங்கப்பட்ட முட்டை கள் அழுகி துர்நாற்றத்துடன் இருந் துள்ளது.இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் தகவல் அளித் துள்ளனர். இதையடுத்து பள்ளிக்கு வந்த பெற்றோர்கள், சத்துணவு மையத்தை முற்றுகையிட்டு சத்து ணவு அமைப்பாளரிடம்  வாக்குவா தத்தில் ஈடுபட்டனர்.   இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பவ  இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சத்துணவில்  தரமான உணவு வழங்கப்படுவ தில்லை. மதிய உணவு துர்நாற்றம் வீசி வருகிறது. இதனை சாப்பிடும் குழந்தைகளுக்கு பேதி, மயக்கம், காய்ச்சல் என அடுத்தடுத்து நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டு வரு கின்றனர். ஆகவே, பள்ளி மாண வர்களுக்கு தரமான உணவு வழங்க வேண்டும். இதே நிலை நீடித்தால் அனைத்து மாணவர்களும் மாற் றுச் சான்றிதழ் வாங்கி வேறு பள்ளி யில் சேர்ப்பதுதான் வழி என்று பெற்றோர்கள் ஆவேசமாக தெரி வித்தனர். இதையடுத்து பெற்றோர் களை சமாதானப்படுத்திய அதி காரிகள், மதிய உணவு தரமாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பெற்றோர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப் பகுதியில் சிறிது நேரம் பெரும் பர பரப்பான சூழல் நிலவியது.