சேலம், பிப்.6- மேச்சேரியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுற் றித்திரிந்த 100க்கும் மேற்பட்ட பாம்புகள் உயிருடன் மீட்கப் பட்டு, வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டன. சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள மேச்சேரியில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில், சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் ஏராளமான பாம்புகள் சுற்றித்திரிகின்றன. இங்கு வேலை செய்யும் தொழி லாளர்கள் அவ்வப்போது பாம்புக்கடிக்கு ஆளாகி மருத்து வமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற சம்பவம் நடந்து வரு கிறது. எனவே, இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, பாம்புக ளைப் பிடிக்க மேட்டூர் வனத்துறையினருக்கு தொழிற்சாலை நிர்வாகத்தினர் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து செங் கல்பட்டு மாவட்டத்தில் இருந்து இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்தினர் 12 பேர் கொண்ட குழுவினர், தொழிற்சாலைக்கு வரவழைக்கப்பட்டனர். அதன்படி, கடந்த ஜன.27 ஆம் தேதி முதல் செவ்வாயன்று வரை 10 நாட்களாக வனத்துறை அதிகாரிகளின் அனுமதியுடன் பாம்பு பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் நல்ல பாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன், சாரை பாம்பு, கொம்பேரி மூக்கன், பச்சை பாம்பு என மொத்தம் 110 பாம்புகள் பிடிக்கப்பட்டு, மேட்டூர் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன. இதைத் தொடர்ந்து பிடிபட்ட பாம்புகள் வாகனம் மூலம் எடுத்து செல் லப்பட்டு, கொளத்தூர் அருகே உள்ள வடபர்கூர் காப்புக் காட்டில் விடுவிக்கப்பட்டன.