districts

img

தோடர் பழங்குடியின மக்களின் மொரத் பர்த்தி பண்டிகை

உதகை, டிச. 25- நீலகிரி மாவட்டத்தில் பரவலாக வசித்து வரும் தோடர் இன பழங்குடியின மக்களின் மொரத் பர்த்தி பண்டிகையை உற்சாகத்தோடு இம்மக்கள் கொண்டாடினர். எருமைகள் விருத்தியடைய வேண்டும் என்பதற்கான விஷேச பண்டிகை  இது என்பது குறிப்பிடத்தக்கது. எங்கள் வாழ்வு வளம் பெற வேண்டும், நம் மக்கள் நோய்  நொடி இல்லாமல் வாழ வேண்டும், எங்கள் எருமைகள் விருத்தி அடைய வேண்டும் என இறைவனை வேண்டி மொரத் பர்த்தி என்கிற பண்டிகையை தோடரின பழங் குடியின மக்கள் கொண்டாடுகின்றனர்.  நீலகிரி மாவட்டத்தில், குரும்பர், இருளர், காட்டுநாயக்கர்,  பனியர், தோடர், கோத்தர் என ஆறு பண்டைய பழங்குடி யின மக்கள் வசித்து வருகின்றனர். இதில் தோடரின மக்கள் உதகை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தங்களுடைய மந்துகளில் வசிக்கின்றனர்.

மொத்தமுள்ள 65 மந்துகளில் மூவாயிரம் தோடர்கள் நீலகிரி யில் மட்டுமே வசிக்கின்றனர். இவர்களின் மொழி, உடை, பாவனைகள் முற்றிலும் இதர பழங்குடியின மக்களை காட்டிலும் வேறுபட்டிருக்கும். மொரத் பர்த்தி என்கிற பண்டிகை இம்மக்களின் முக்கிய பண்டிகையாகும். எருமைகள், கால்நடை பராமரிப்பாளர்களான இவர்கள் பால் பொருட்களை உட்கொள்ளும் சைவர்கள். தங்களது அனைத்து இறை வழிபாடுகள் மற்றும் விசேஷங்களில் இவர்களது எருமைகளுக்கே முதலிடம் அளிப்பார்கள். அத்தகைய எருமைகள் விருத்தியடைய வேண்டும், தங்கள் வாழ்வு வளம் பெற வேண்டும் என வேண்டி ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில், டிசம்பர் இறுதியிலோ அல்லது  ஜனவரி முதல் வாரத்திலோ மொரத் பர்த்தி பண்டிகை  கொண்டாடப்படுவது வழக்கம். இதில், மாவட்டத்தில் உள்ள  தோடரின மக்கள் பங்கேற்று கோலாகலமாக கொண்டா டுவர்.  இந்தாண்டுக்கான பண்டிகை, தோடரின மக்கள் வசிக்கும்  மந்துகளின் தலைமை மந்தான தலைகுந்தா அருகேயுள்ள  முத்தநாடு மந்தில் ஞாயிறன்று சிறப்பாக கொண்டா டப்பட்டது. இதில், நீலகிரி மாவட்டத்தின் அனைத்து பகுதி களிலும் உள்ள பெரும்பாலான தோடரின மக்கள் கலந்து கொண்டு, முத்தநாடு மந்தில் உள்ள பழமை வாய்ந்த மூன் போ மற்றும் ஓடையாள்போ கோயில்களில் சிறப்பு வழிபாடு  நடத்தினர்.