districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கோடை விழா: நுழைவு கட்டணம் வசூலித்ததில் தவறுகள்

உதகை, மே 30- கோடை விழாவிற்கு வந்த பொதுமக்களிடம் நுழைவு கட்டணம் வசூலித்ததில் தவறுகள் நடைபெற்றுள்ளதாக கூட லூர் நகராட்சி கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள மன்ற அரங் கில் நகர சபை கூட்டம் திங்களன்று நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு மன்ற தலைவர் பரிமளா தலைமை வகித்தார். ஆணை யாளர் பிரான்சிஸ் சேவியர், பொறியாளர் பார்த்தசாரதி, துணைத்தலைவர் சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்த னர். இக்கூட்டத்தில் மன்ற ஒப்புதல் பெறுவதற்காக தீர்மானங் கள் வாசிக்கப்பட்டன. பின்னர் பல்வேறு விவாதங்கள் நடை பெற்றன. அப்போது கவுன்சிலர் உஸ்மான் என்பவர், ஒவ் வொரு மன்ற கூட்டத்திலும் நிறைவேற்றப்படும் தீர்மானங் களின் நகல் அடுத்த கூட்டத்தில் வழங்க வேண்டும் என  வலியுறுத்தப்படுகிறது. ஆனால், இதுவரை வழங்கவில்லை என குற்றஞ்சாட்டினார். இதையடுத்து அபிதா பேகம் பேசுகை யில், வார்டில் தேங்கும் குப்பைகளை முறையாக அகற்றுவ தில்லை. இதுதொடர்பாக விளக்கம் கேட்டால் பணியாளர்கள் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. எனவே, குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி னார். தொடர்ந்து வர்கீஸ் என்பவர் பேசுகையில், குப்பை களை கொண்டு செல்வதற்கு சிறிய வாகனங்களை வாங்கு வதற்கு பதிலாக மலைப்பிரதேசத்தை கருத்தில் கொண்டு மினி லாரி புதியதாக வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். இதன்பின் ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர் பேசுகையில், மினி லாரி வாங்குவதற்கு உயர் அதிகாரிகளி டம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் மினி லாரி வாங்கப்படும், என உறுதியளித்தார். ராஜேந்திரன் என்ப வர் பேசுகையில், கூடலூரில் நடந்த கோடை விழாவில் 50க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதற்கு வாடகை வசூலிக்கப்பட்டது. இதுதவிர கோடை விழா விற்கு வரும் பொதுமக்களிடம் நுழைவு கட்டணமாக ரூ.10 பெறப்பட்டது. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள னர். நுழைவு கட்டணம் வசூலித்ததில் தவறுகள் நடை பெற்றுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். மேலும் வரும் காலங்களில் நகராட்சி சார்பில் கோடை விழா நடத்த வேண்டும், என்றார். தொடர்ந்து நகராட்சி பகுதியில் பூங்கா அமைத்து நுழைவு கட்டணம் வசூலித்தால் நகராட்சிக்கு வருவாய் கிடைக்கும். இதன் மூலம் மக்களின் அடிப்படை வளர்ச்சி பணிகளுக்கு நிதியை பயன்படுத்தலாம் என அனைத்து கவுன்சிலர்களும் வலியுறுத்தினர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் உறுதியளித்தார். தொடர்ந்து நகராட்சி பொறியாளர் பார்த்தசாரதி பணி ஓய்வு பெறுவதால் மன்றம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நீர்மட்டம் சரிவு

ஈரோடு, மே 30- பவானிசாகர் அணை யின் (105 அடி) முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக மழை  இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது. இதன்படி செவ்வாயன்று காலை நில வரப்படி அணையின் நீர்மட் டம் 82 அடியாக சரிந்தது. அணைக்கு வினாடிக்கு 955 கன அடி நீர் வந்து கொண்டி ருக்கிறது. 955 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது.

நூதன முறையில் கொள்ளை

கோவை, மே 30- கோவை மாவட்டம், குனியமுத்தூர் - பாலக்காடு சாலை, ஞானபுரம் ஜங்சனில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வரு கிறது. அங்கு 7 பேர் கும்பல் சென்று, அங்கிருந்த ஊழியர் ஒருவரிடம் தங்களை ஜமாத்தில் இருந்து வருவதாக அறி முகம் செய்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் போதைப் பொருள் விற்பனையை தடுக்க தாங்கள் ஒவ்வொரு கடை யாக சோதனை செய்து வருவதாகவும், இங்கும் சோதனை செய்ய வேண்டும் என கூறி அத்துமீறி உள்ளே நுழைந்தனர். இதன்பின் இந்த கும்பல், சோதனை செய்வது போல நடித்து ஊழியரை மிரட்டி அங்கிருந்த மொபைல் டேப், கண்காணிப்பு  கேமரா மற்றும் ஒரு சிம்கார்டை கொள்ளையடித்து சென்ற னர். இதனால், அதிர்ச்சியடைந்த நிறுவன ஊழியர், குனிய முத்தூர் போலீசில் புகாரளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேர் கொண்ட கும்பலை தேடி வரு கின்றனர்.

ஜமாபந்தியில் 434  மனுக்கள்

சூலூர், மே 30- சூலூரில் நடைபெற்ற ஜமாபந்தியில் பெறப்பட்ட 434  மனுக்களில் 10 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. கோவை மாவட்டம், சூலூர் வட்டாட்சியர் அலுவலகத் தில் ஜமாபந்தி எனப்படும் உடனடி குறைதீர்ப்பு முகாம் மாவட்ட வருவாய் தீர்வாயம் சார்பில் தலைமை மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் தலைமையில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. இந்த முகாமில் சூலூர் சுற்றுவட்டார பகு தியைச் சார்ந்த 41 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பங் கேற்று மனுக்களை வழங்கினார். இதில் வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் மனுக்களாகப் பெறப்பட்டது. கரு மத்தம்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 118 மனுக் களும், சூலூரில் 138 மனுக்களும், செலக்கரிசல் பகுதி யில் 108 மனுக்களும், வாரப்பட்டி பகுதியில் 70 மனுக்களும் என 434 மனுக்கள் பெறப்பட்டன.  இதில் பட்டா மாறுதல், பட்டா வழங்குதல் என 10 பேரின் மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உடனடியாக பட்டா வழங்கப்பட்டது. மற்ற மனுக்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியரின் பார்வைக்கு அனுப்பப்பட்டு, தீர்வு காண நடவ டிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா

திருப்பூர், மே 30 - கோடை விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு கணித  மற்றும் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்தும் வகையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல்  இயக்கம் இணைந்து “ஆயிரமாயிரம் அறிவியல் திரு விழா”வை நடத்தினர். வானவில் மன்ற கருத்தாளர்கள் மூல மாக ஒவ்வொரு பகுதியிலும் இவ்விழாவை நடத்தி வரு கின்றனர். அதன்படி பல்லடம் ஒன்றியம். மாணிக்காபுரம் பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா சிறப்பாக நடை பெற்றது.  அப்போது வானவில் மன்ற கருத்தாளர் கலையரசி மற்றும்  சரண்யா ஆகியோர் மாணவர்களுக்கு அறிவியல் சோத னைகள், கணித செயல்பாடுகள், அறிவியல் அற்புதங்கள், ஓரிகாமி, கிராம வரைபடம் மற்றும் வேடிக்கை விளை யாட்டுக்கள் போன்றவற்றை செய்து காட்டி மாணவர்களை உற்சாக மூட்டினர்.  இந்நிகழ்வில் மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்விற் கான ஏற்பாடுகளை இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ஷர்மிளா, தீபா, காஞ்சனா, பவித்ரா, சத்யதாரணி ஆகி யோர் சிறப்பாக செய்து இருந்தனர்.

தனியார் கல்லூரி மீது மாணவி புகார்

திருப்பூர், மே 30- மாற்று சான்றிதழ் வழங்காத தனியார்  கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவி ஒருவர் குடும்பத்தாருடன்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார். திருப்பூர் மாவட்டம், மங்கலம் பகுதியை  சேர்ந்த சங்கீதா அருந்ததிய சமுகத்தை சேர்ந்தவர். இவர் 2022 ஆம் ஆண்டு மங்கலம்  பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி யில் 12 ஆம் வகுப்பு படித்துள்ளார். இதை யடுத்து காரமடையில் உள்ள ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரியில் 2022 - 23 ஆம்  ஆண்டு இசிஇ படிப்பில் சேர விண்ணப்பித் துள்ளார். அருந்ததியர் சமுகத்திற்கு இலவச  கல்வி படிப்பு என்று கல்வி நிர்வாகம் கூறி யதை நம்பி சேர்ந்துள்ளார். 40 நாட்கள் கல்வி கற்பித்த நிலையில், கல்லூரி நிர்வாகம் கல்வி கட்டணத்தை கட்ட வேண்டுமென்று நிர்பந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. அருந் ததிய மாணவிகளுக்கு இலவச கல்வி என்று  கூறியதாலேயே கல்லூரியில் சேர்ந்ததா கவும், தற்போது கட்டணம் கட்ட வற்புறுத்தி யதால் கல்லூரியில் இருந்து நின்றுவிட் டார்.  இந்நிலையில், கல்லூரி நிர்வாகம் மாற்று  சான்றிதழை வழங்க மறுத்து வருவதாகவும்,   மாற்று சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால் கல்லூரியில் படித்த 40 நாட்களுக் கான கட்டணத்தை கட்ட வேண்டும் என்று  கூறினர். மேலும், தன்னையும், குடும்பத்தா ரையும் கல்லூரி நிர்வாகத்தினர் தரக்குறை வான வார்த்தைகளால் பேசுகிறார்கள்.  மாற்று சான்றிதழை கொடுக்காததால் வேறு கல்லூரியில்  சேர்ந்து படிப்பதற்கு  கூட முடி யாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  எனவே, மாவட்ட நிர்வாகம், கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுப்பதோடு  தனது மாற்று சான்றிதழை பெற்றுத்தர  வேண்டும் என மனு அளித்தார்.

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

கோவை, மே 30- கோவையில் திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர் பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த வர் வேல்முருகன். இவரது மகள் தனிகா (20). இவருக்கும் கோவை மாவட்டம், பீளமேடு அருகே உள்ள ராஜூ நாயுடு  லே-அவுட்டைச் சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலை யில், வீட்டில் யாரும் இல்லாதபோது, தனிகா திடீரென தூக் கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் குடும்ப பிரச் சனையில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு  ஏதேனும் காரணமா? என்பது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், தனிகாவுக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆவதால் கோட் டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பேட்டரிகள் திருட்டு: வாலிபர்கள் மீது தாக்குதல்

பள்ளிபாளையம், மே 30- ஆட்டோக்களில் உள்ள பேட்டரிகளை திருடியதாக இரண்டு பேரை பிடித்து அப்பகுதி இளைஞர்கள் தாக்கி யுள்ளனர்.  நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்துள்ள ஒட்ட மெத்தை என்ற பகுதி அருகே, கடந்த சில வாரங்களாக, தொடர்ந்து வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஆட்டோவில் உள்ள வாகனங்களில் பேட்டரிகள் திருடு போன தாக கூறப்படுகிறது. இந்நிலையில்,  இரவு 10 மணியளவில்  சந்தேகத்துக்குரிய வகையில் ஒட்டமெத்தை பகுதி அருகே சுற்றி திரிந்த  இருவரை அப்பகுதி பொதுமக்கள் விசாரித்த பொழுது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ள னர். இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இருவரையும் சுற்றி வளைத்து சர மாரியாக தாக்கினர். இதில் வாலிபர்கள் இருவருக்கும் தலை மற்றும் கால்  பகுதியில் கடும் வீக்கம் ஏற்பட்டு, மயக்க நிலைக்கு சென்ற னர். இதனை அடுத்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபர்கள் இருவரையும் மீட்டனர். இதனையடுத்து நடைபெற்ற விசார ணையில், இவர்கள்  ஒட்டமெத்தை பகுதியை சேர்ந்த அஜித் குமார் (28), வெங்கடேசன்(30) என்பதும் தெரிய வந்தது. மேலும், ஆட்டோ பேட்டரிகள் காணாமல் போனதற்கும், அவர் களுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தண்ணீரில் மூழ்கி விவசாயி பலி

இளம்பிள்ளை, மே 30- சங்ககிரி அருகே உள்ள மோரூர் பெரிய ஏரியில் மீன் பிடிக்க சென்ற விவசாயி தண்ணீரில் மூழ்கி உயிரி ழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.  சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த கஸ்தூரிப்பட்டி, குன்னிதேர் காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன் (47). இவரது நண்பர்கள் கட்டையனூர் பகுதியைச் சேர்ந்த பச்சமுத்து மகன் குமரன், ஆணைக் கல்பாலையம் பெருமாள் மகன் ராஜா ஆகியோர் வழக்கம் போல்  ஞாயிறன்று மோரூர் பெரிய ஏரியில் மீன் பிடித்துள்ளனர். குமரனும், ராஜா வும் வெளியே சென்று விட்டு திரும்பி வந்து பார்த்துள்ளனர். அப்போது சீனிவாசனின் ஆடைகள் கழற்றி கரை யில் வைக்கப்பட்‌டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர் காணாமல் போனது பற்றி சங்க கிரி காவல்துறை, தீயணைப்பு துறை யினருக்கும் தகவல் தெரிவித்துள்ள னர். இதனையடுத்து, தீயணைப்பு வீரர்கள் ஏரி தண்ணீரில் மூழ்கி உயிரி ழந்த சீனிவாசனின் சடலத்தை மீட்டனர்.  இதுகுறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலத்தை மீட்டு பிரதே பரிசோதனைக்காக சங்க கிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோதமாக பாறைகள் உடைப்பு

உதகை, மே 30- மேல் கூடலூரில் விதிமுறைகளை மீறி பாறைகளை உடைத்தது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பிர தேசமாக உள்ளது. இதனால் மண்ணின் வளத்தை பாது காக்க பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தவும், விற் பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் கல் குவாரிகளுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் பாறைகளை உடைக்க தடை விதிக்கப் பட்டு இருக்கிறது. இந்நிலையில், கூடலூர் அருகே மேல் கூடலூர் பகுதியில் விதிமுறைகளை மீறி மேடான இடங்களை சமப்படுத்தி, அதில் உள்ள பாறைகளை உடைத்து வணிக ரீதி யாக பயன்படுத்துவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப் படுகிறது. இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் கவ னத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் உத்தரவின் பேரில், கூடலூர் கோட் டாட்சியர் முகமது குதரதுல்லா, வட்டாட்சியர் சித்ராஜ் உள் ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் பாறைகள்  உடைக்கப் பட்ட இடத்தில் நேரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து விதி முறைகளை மீறி பாறைகளை உடைத்த நபர்கள் குறித்து விசா ரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகை யில், மேல் கூடலூர் பகுதியில் பாறைகள் உடைத்தது தொடர் பாக உரிய விசாரணை நடைபெற்று வருகிறது. விதிமுறை களை மீறியதால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்ற னர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், நிலச்சரிவு அபா யம் உள்ள பகுதியில் பல வாரங்களாக பாறைகள் உடைத்து  அகற்றப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பலமுறை வரு வாய் ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தும் எந்த தடுப்பு நட வடிக்கையும் எடுக்கவில்லை, என குற்றஞ்சாட்டினர்.

பூக்கள் ஏலம்

ஈரோடு, மே 30- சத்தியமங்கலம் - கரட் டூர் சாலையில் பூ மார்க்கெட் டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை  பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி திங்களன்று நடை பெற்ற ஏலத்தில் மல்லிகை கிலோ ஒன்று ரூ.350க்கும், முல்லை ரூ.120க்கும், காக் கடா ரூ.700க்கும், செண்டு மல்லி ரூ.44க்கும், கனகாம் பரம் ரூ.410க்கும், சம்பங்கி ரூ.10க்கும், அரளி ரூ.60க்கும், துளசி ரூ.40க்கும், செவ்வந்தி ரூ.120க்கும் ஏலம் போனது.