திருப்பூர், மார்ச் 25 - திருப்பூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடைபெறுவது போல இந்த ஆண்டும் ஜல் லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என்று மாநில செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனியன்று நடை பெற்றது. இதில் மாநில செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் 19 மாற் றுத் திறனாளிகளுக்கு ரூ. 15 லட்சத்து 86 ஆயி ரம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருந் திய பெட்ரோல் ஸ்கூட்டர், பார்வை திறன் மற்றும் செவித்திறன் குறைபாடு உடைய 87 பயனாளிகளுக்கு ரூ. 11 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பிலான ஸ்மார்ட் போன் வழங்கப்பட் டது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநில செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் மாவட்டம், அலகுமலையில் கடந்த நான்கு ஆண்டுக ளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வந்தது போல, இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். அது தொடர்பான எந்த பிரச்சனைகளும் தற்போது இல்லை. மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கப்பட்டி ருக்கிற நிலையில் ஏப்ரல் 23ஆம் தேதி ஜல்லிக் கட்டு போட்டிகள் நடப்பதற்கான வாய்ப்பு கள் இருப்பதாக தெரிவித்தார்.