districts

img

அரசு மகளிர் பள்ளியில் அமைச்சர் திடீர் ஆய்வு

தருமபுரி, அக்.10- பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வியாழ னன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு  மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி வியாழனன்று காலை திடீரென ஆய்வு மேற்கொண்டார். இறை வணக்க நிகழ்ச்சி யில் கலந்து கொண்ட அவர், தமிழக முதல் வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி, விநாடி - வினா, பேச்சுப்போட்டியில் வெற்றி  பெற்ற மாணவிகளுக்கு பதக்கமும், சான்றி தழும் வழங்கினார். அப்போது அவர் பேசுகை யில், ஒவ்வொரு மாணவியும், சக மாணவிக ளுக்கு பாடத்தில் உள்ள சந்தேகங்களை தீர்க்க சொல்லித்தர வேண்டும். கல்வியுடன்  ஒழுக்கம், பணிவு, நேரம் தவறாமையை கடை பிடித்து வாழ்வின் உன்னத நிலைய அடைய வேண்டும், என்றார். மேலும், கடந்த கல்வி யாண்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இப்பள்ளி முதலிடம் பெற்றமைக்கு, தலை மையாசிரியர் புனிதா மற்றும் உதவி ஆசிரி யர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார். அத னைத்தொர்ந்து, பள்ளியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடப் பணிகள் குறித்து ஆய்வு  செய்து, விரைந்து மாணவிகளின் பயன்பாட் டிற்கு கொண்டு வர வேண்டும் என அறிவு றுத்தினார். மேலும், 10 ஆம் மற்றும் 12 ஆம்  வகுப்பறைகளுக்கு சென்று மாணவிகளின் கல்வி நிலை குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ் வில், பாலக்கோடு பேரூராட்சித் தலைவர் பி.கே.முரளி, துணைத்தலைவர் தாஹசீனா இதாயத்துல்லா, திமுக நிர்வாகிகள் ராஜ பாட், முருகன், அமீர்ஜான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.