திருப்பூர், மார்ச் 21 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை நகர கமிட்டி யின் சார்பில் திங்களன்று மார்க்சிஸ்ட் தத்துவ மாத இதழ் வாச கர் வட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலா ளர் நீல மணிகண்டன் தலைமை ஏற்றார். இந்த வாசகர் வட்டத் தில் பிப்ரவரி மாத மார்க்சிஸ்ட் இதழ் கட்டுரையை தோழன் ராஜா அறிமுகம் செய்து வைத்தார். கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.ஆர் மதுசூதனன், நகரக் கமிட்டிச் செய லாளர் கே.பாலதண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்று மார்க் சிஸ்ட் மாத இதழ் கட்டுரைகள் சம்பந்தமாக கலந்துரையா டினர்.