திருப்பூர், பிப்.22 - டாஸ்மாக் மதுபான பாரில் நெகிழி டம்ளர், தண்ணீர் பாட்டிலை அநி யாய விலைக்கு விற்கும் பார் உரிமையாளர், அருகாமை பெட்டிக்கடையில் அவற்றை விற்கக்கூடாது என்று கடைக் காரரை மிரட்டி ரவுடிகளை ஏவி கடுமையாகத் தாக்குதல் நடத்தியிருக்கிறார். எனவே பார் உரிமையாளர் மற்றும் ரவுடிகளை உடனடியாகக் கைது செய்வதுடன், டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் வேலாம்பாளையம் நகரக்குழு செயலாளர் ச.நந்தகோபால் விடுத்துள்ள அறிக்கை: திருப்பூர் மாநகராட்சி, 13 ஆவது வார்டுக்குட்பட்ட அ.புதூர் வேலம்பாளையம் சாலை டாஸ்மாக் கடை எண் 1998 ல் அமைந்துள்ள பாரை ராஜா என்பவர் நடத்தி வருகிறார். அங்கு நெகிழி டம்ளர், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட பொருட்களை மிக அதிக விலைக்கு விற்று வருகிறார். இந்த கடைக்கு அருகில் பல ஆண்டுகளாக சிறிய பெட்டிக் கடையை நடத்தி வருபவர் குணசேகர். இவர் அதே பகுதியைச் சேர்ந்தவர். வியாழனன்று மதியம் இவரது கடைக்கு வந்த டாஸ்மாக் பார் ரவுடிகள் முருகானந்தம், ராமலிங்கம், மணி, கார்த்திக் ஆகியோர் நெகிழி டம்ளர், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை விற்கக் கூடாது என அவரை மிரட்டியுள்ளனர். மேலும், பேசிக் கொண்டி ருக்கும் போதே, விறகுக் கட் டைகள், நெகிழி பைப்பு கள், கற்கள் ஆகியவற்றால் குணசேகரை மிகக் கடுமை யாகத் தாக்கியுள்ளனர். குணசேகரின் மகன் கௌரிசங்கர், தனது தந் தையைத் தாக்கும் ரவுடி களை தடுத்தபோது அவரை யும் தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த குண சேகர், கௌரிசங்கர் ஆகியோர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். ரவுடிகளும் ரத்தகாயம் ஏற்ப டுத்திக் கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக தங்கியுள்ளனர். ரவுடிகளைக் கொண்டு, பார் நடத்தும் ராஜாவையும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வன்முறையில் ஈடுபட்ட ரவுடிகள் முருகானந்தம், ராமலிங்கம், மணி, கார்த்திக் மற்றும் அடையாளம் தெரியாத நபரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். என வலியுறுத்தியுள்ளார். பொது மக்களை அச்சுறுத்தும் மதுபான பார் உரி்மையாளர் உள்ளிட்ட ரவுடிகளைக் கைது செய்யவும், டாஸ்மாக் கடையை மூடவும் வலியுறுத்தி வரும் 26ஆம் தேதி திங்கள்கிழமை அனுப் பர்பாளையம் புதூர் கோவை டிபார்ட்மெண் டல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என்றும் ச.நந்தகோபால் கூறியிருக் கிறார்.