திருப்பூர், டிச.26- ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தைக் கைவிட வேண்டும் எனக்கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் மனு அளிக்கும் இயக்கம் செவ் வாயன்று நடைபெற்றது. ஊத்துக்குளி: ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஊத்துக்குளி செயற்பொறியாளர் அலுவலகத் தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஊத்துக்குளி தாலுகாக்குழு சார்பில் செவ்வாயன்று மனு அளிக் கப்பட்டது. முன்னதாக நடைபெற்ற விளக்க கூட்டத்திற்கு தாலுகாக் குழு உறுப்பினர் ச.சசிக்குமார் தலைமை வகித்தார். இதில், மாவட்டக்குழு உறுப்பி னர் கே.சரஸ்வதி, தாலுகாச் செய லாளர் எஸ்.கே.கொளந்தசாமி, தாலுகாக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண் டனர். பல்லடம்: அதேபோல பல்லடம் ஒன்றிய குழுவின் சார்பில் பல்லடம் மற்றும் காளிவேலம்பட்டி துணை மின் வாரிய அலுவலகங்களில் மனு அளிக்கப்பட்டது. இதில், ஒன்றியச் செயலாளர் ஆர்.பரமசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.