districts

img

சாலையோரம் வாகனம் நிறுத்த கட்டணம் வசூலிப்பதா?

ஊழலுக்கே ஸ்மார்ட் சிட்டி திட்டம்!

திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்பது ஊழல் திட்டம் என மாமன்றத்தில் கவுன்சிலர்கள்  குற்றஞ்சாட்டினர். இத்திட்டத்தில் ஏராளமாக ஊழல் நடைபெற்றிருப்பதாக இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி கவுன்சிலர் எஸ்.ரவிச்சந்திரன், செல்வராஜ் ஆகியோர் கூறினர். அதிமுக கவுன்சி லர் கண்ணப்பன் பேசும்போது, ஊழல் குற்றச்சாட்டில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்  என்று கூறினார். அதேபோல் மாநகரில் குப்பை அள்ளுவதற்காக வாங்கப்பட்ட பேட்டரி வாகனங்களில்  மிகப்பெரும் ஊழல் நடைபெற்றிருப்பதையும் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டி நடவடிக்கை  எடுக்க வலியுறுத்தினர். மொத்தம் 479 வாகனங்கள் வாங்கப்பட்டதில் தற்போது 202 வாகனங் கள் மட்டுமே இயங்குகின்றன. மீதி வாகனங்கள் நிலை குறித்து விசாரணை செய்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அத்துடன் எஞ்சிய 277 வாகனங்களையும் சரி செய்து  இயக்கவதற்கும் நடவடிக்கை எடுக்கக் கோரினர்.

திருப்பூர், ஜூலை 12 – திருப்பூர் பழைய பேருந்து நிலையம் முன் புறம் இருக்கும் பாலத்திற்கு கீழே வாகனங் களை நிறுத்த கட்டணம் வசூலிப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப் பினர் ர.மணிமேகலை எதிர்ப்புத் தெரிவித் தார். செவ்வாயன்று திருப்பூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட் டத்தில் கட்டணம் வசூலிப்பது குறித்த தீர்மா னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மார்க்சிஸ்ட் கட்சி கவுன்சிலர் இரா.மணிமேகலை அளித்த  கடிதத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாந கரின் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மேம்பாலத்திற்கு கீழே சாலையோரம் வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிப்பது என்று மாநகராட்சி தீர்மானம்  முன்மொழிந்துள்ளது. இது கடும் அதிர்ச் சியை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது.

பழைய பேருந்து நிலையத்துக்கு அருகி லேயே சந்தைகள், வியாபார நிறுவனங்கள், பள்ளிக்கூடம், மருத்துவமனை என பொது பயன்பாட்டு அமைப்புகள் ஏராளமாக அமைந்துள்ளன. ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கான ஏழை, எளிய மக்கள் போக்குவ ரத்து நெருக்கடியும், இடவசதி இல்லாத நிலையும் இருக்கக்கூடிய இந்த பகுதியில் தங்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலை உள்ளது. இந்த நிர்ப்பந்தமான சூழ்நிலையை வரு வாய் இட்டுவதற்கான வழிமுறையாக மாநக ராட்சி நிர்வாகம் கட்டணம் வசூலிப்பது அநீதி யானது.  ஏற்கனவே சீர்மிகு நகரத் திட்டத்தில் பழைய பேருந்து நிலையத்திற்கு உள்ளேயே ஒரு பகுதியில் அடுக்குமாடி இருசக்கர, நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம் ஏற்பாடு  செய்யப்பட்டு உள்ளது. சீர்மிகு நகரம் திட்டத் திற்காக மேற்கொள்ளப்படும் பணிகளில் பொதுமக்களுக்கு இலவச சேவை வழங்கு வது என்பதை, கட்டணம் வசூலிக்கும் நடைமு றையாக மாற்றி உள்ளனர். சீர்மிகு திட்டத்திற் காக வங்கிகளில் பெறப்பட்ட கடனுக்காக, வர்த்தக ரீதியாக இப்படிப்பட்ட திட்டம் மக் களை பாதிக்கும் என்பதை மார்க்சிஸ்ட் கட்சி  ஆரம்ப நிலையிலேயே எதிர்த்தது.

தற்போது அதை நடைமுறைப்படுத்த முயற்சிப்பது. மக்களை கடும் பாதிப்புக்குள் ளாக்கும். பழைய பேருந்து நிலையம் பகு திக்கு வரக்கூடிய இருசக்கர வாகனங்களை அடுக்குமாடி வாகன நிறுத்தத்தில் நிறுத்தச் செய்து பணம் வசூலிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடனே, சாலையோரம் நிறுத் தக்கூடிய வாகனங்களுக்கும் கட்டணம் வசூ லிக்கப்படுவதாக தெரிகிறது. அத்துடன் மாற்றுத் திறனாளிகளுக்கு வாகனம் நிறுத்த கட்டணம் வசூலிக்கும் முடிவு, ஏற்கனவே அவர்களுக்கு உள்ள  கட்டண விதிவிலக்கு என்பது கைவிடப் படுவதைக் காட்டுகிறது. மனிதாபிமானமற்ற இந்த முடிவை கைவிட வேண்டும். எனவே மாநகராட்சி நிர்வாகம் சாமானிய  ஏழை, எளிய மக்கள் சிறு, குறு வியாபாரி களை ஒவ்வொரு நாளும் கட்டணம் செலுத்த  வைக்கும் கடுமையான இந்த முடிவை எவ் வித நிபந்தனையும் இன்றி உடனடியாக கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட் டுக் கொள்கிறோம். அத்துடன் அடுக்குமாடி வாகன நிறுத்தத் திலும் சாமானியர்களை பாதிக்காத வகை யில் குறைந்தபட்ச கட்டணமாக மாற்றி அமைக்க வேண்டும் ஆர்.மணிமேகலை வலி யுறுத்தி கேட்டுக் கொண்டார்.