திருப்பூர், டிச.1- திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஏவிபி லேஅவுட் பகுதியில் தரமில்லாமல் அமைக்க படும் சாலைப் பணிகளை ஆய்வு செய்யும் படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் மற்றும் ஊர் பொதுமக்கள் முதலாம் மண் டல உதவு ஆணையாளரைச் சந்தித்து வலியு றுத்தினர். அதன் அடிப்படையில் மண்டலத் தலைவர் வியாழனன்று ஆய்வு மேற்கொண் டார். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஏவிபி லேஅவுட் மேற்கு வீதியில் அமைக்கப்படும் தார்ச் சாலை தரமில்லாமல் அமைக்கப்படுகிறது. மேலும் இப்பகுதியில், குடிநீர் வழங்கப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகின் றன. எனவே உடனடியாக ஆய்வு செய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை பெய்யும் நாட்களில் கழிவு நீர் கால் வாய் வழிந்து வடக்கு பகுதி யில் சேரும் சகதியுமாக உள்ளது. அதை ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும் என முதலாம் மண்டல உதவி ஆணையாளரைச் சந்தித்து கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில், மண்டலத் தலை வர் மற்றும் அதிகாரிகள் ஏவிபி லேஅவுட் பகுதிக்கு வந்து நேரில் ஆய்வு செய்தனர். பத்து நாட்களில் குடிநீர் வழங்க நடவ டிக்கை எடுக்கப்படும். மேலும் கழிவுநீர் கால் வாயை ஆய்வு செய்து விரைவில் நடவ டிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த னர்.