தருமபுரி, ஆக.17- தருமபுரி அருகே பட்டியலினப் பெண்ணை கடத்தி சென்று நிர்வாணப்படுத்தி மதுபா னம் ஊற்றி சித்திரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை, பட்டியலினத்தை சேர்ந்த சுரேந்தர் என்பவர் பள்ளிப் பருவத்தில் இருந்து காதலித்து வந்ததாக சொல்லப்படு கிறது. இந்நிலையில், ஆகஸ்ட் 14 அன்று சுரேந்தர் வீட்டை விட்டு சென்றவர் காலை முதல் வீட்டிற்க்கு வரவில்லை. அதே நேரத் தில் அப்பெண்ணும் காணவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் அப்பெண் ணின் தந்தை மற்றும் உறவினர்கள் என 20 பேர், சுரேந்தர் வீட்டுக்கு ஆகஸ்ட் -15 அன்று சென்று சுரேந்தரின் தந்தை செல்வம் மற்றும் அவரது தாய் இருவர் மீதும் தாக்குதல் நடத்தி, மிரட்டியுள்ளனர். அதை பார்த்த செல்வத்தின் அண்ணன் மகன் அர்ஜுன் சுப்பிரமணி, தடுத்த போது, அவரையும் அடித்துள்ளனர். பின்னர், சுரேந்திரன் தாயை இருசக்கர வாகனத்தில் கட்டாயப்படுத்தி ஏற்றிச்சென்றுள்ளனர். இதுகுறித்து சுரேந்திரனின் தந்தை மொரப் பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, மொரப்பூர் காவல்துறையி னர் 16 ஆம் தேதி கடத்தப்பட்ட பெண்ணை மீட்டு அரூர் அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்ட பின்பு அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைத் தனர். மேலும், பெண்ணை கடத்திச் சென்ற பூபதி, செல்வி, பொன்ராசு, கலையரசன், வேலு, என ஐந்து பேர் உள்ளிட்ட 15 மீது எஸ்.சி / எஸ்.டி, பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து கடத்திச் செல்லப்பட்ட பெண் கூறுகையில், காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று என் மகன் எங்கே என்று கேட்டு பல்வேறு சித்திர வதைகளை செய்தனர். கட்டாயப்படுத்தி மதுபானத்தை வாயில் ஊற்றினர். பின்னர் மயங்கி இருந்த நான் விழித்துப் பார்க்கும் போது ஆடை இன்றி இருந்தேன். பின்னர், உன் மகன் இருக்கும் இடம் சொல்லவில்லை என்றால் குடும்பத்தோடு கொன்று விடு வோம் என மிரட்டிச்சென்றனர். அதன் பிறகு காவல்துறையினர் அந்த இடத்திற்கு வந்து எண்ணை மீட்டுச்சென்றனர், என்றார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாவட்டச் செயலாளர் ஏ.சேகர் கூறுகை யில், பட்டியலின பெண்ணை கடத்தி சென்று நிர்வாணப்படுத்தி வாயில் மது ஊத்தி பல் வேறு சித்திரவதைகளை சாதி ஆதிக்க கும் பல் செய்துள்ளனர். இந்த வழக்கில் உள்ள அனைவரையும் கைதுசெய்யவேண்டும்.சாதி ஆதிக்க சக்திகளால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண் டும். தொடர்ந்து அரூர் பகுதியில் பட்டியினத்த வருக்கு பல்வேறு வடிவங்களில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இதுபோன்ற சம்ப வங்களில் காவல்துறையினர் குற்றவாளிக ளிடம் மென்மையான போக்கை கடைபிடித்து வருகின்றனர்.இது போன்ற விசயங்களில் மெத்தனமாக செயல்படுகின்றனர்.எனவே பட்டியல் இன மக்கள் பாதிக்கப்படும் போது காவல்துறை விரைந்து செயல்பட்டு குற்ற வாளிக்கு தண்டனை பெற்றுதரும் மூலம் வன்கொடுமை தடுக்கமுடியும் என தெரி வித்தார்.