ஈரோடு, நவ.6- எனக்கு நிரந்திர வேலை இருக்கி றது, நான் ஏன் சங்கம் சேர வேண் டும் என இப்போது நீங்கள் நினைத் தால், நாளையே உங்கள் முதலாளி விஆர்எஸ் கொடுக்கிறேன் வெளியே போ என விரட்டினால் உனக்காக பேச வீரியத்துடன் ஒரு சங்கம் இல்லாமல் போகும், தனியார் மயம், ஒப்பந்த முறைக்கு எதிராக அனைவரும் ஒன்று திரள வேண்டிய காலம் இது என ஈரோட்டில் நடைபெற்ற தனியார் மய எதிர்ப்பு கருத்தரங்கில் தலைவர் கள் உரையாற்றினர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சிஐடியு சார் பில் தனியார் மயம், ஒப்பந்த முறை எதிர்ப்பு கருத்தரங்கம் ஈரோட்டில் செவ்வாயன்று நடைபெற்றது. தனியார் மயம், ஒப்பந்த முறை எதிர்ப்பு கருத்தரங்கத்திற்கு, பன்முக மேம்பாட்டுக்குழுத் தலைவர் என்.முருகையா தலைமை வகித்தார். ஈரோடு மண்டல பொதுச் செயலாளர் டி.ஜான்சன் கென்னடி வரவேற்றார். இக்கருத்தரங்கில், சம்மேளன பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார், ஏஐடியுசி மாநிலத் தலை வர் காசிவிஸ்வநாதன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலா ளர் எஸ்.ராஜேந்திரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் எம்.சீனிவாசன் மற்றும் பணியாளர் சம்மேளன நிர் வாகி மனோகரன் ஆகியோர் பேசி னர். நிறைவாக போக்குவரத்து ஊழி யர் சங்க ஈரோடு மண்டலத் தலைவர் கே.மாரப்பன் நன்றி கூறினார். முன்னதாக இந்நிகழ்வில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேசுகையில், ஒரு நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கான சம்பள ஒப் பந்தம் போடப்படும். அடுத்த ஆண்டு சம்பள உயர்வு வழங்கப்படும். ஆனால், எவ்வளவு சம்பளம் கூடியி ருந்தாலும் அந்த நிறுவனத்தின் ஒட்டு மொத்த செலவில் அது 5 விழுக் காடு என்பது 6 விழுக்காடாக மாறாது. எத்தனை ஒப்பந்தங்கள் போட்டாலும் அது 6 விழுக்காடாகாது. அதை உடைப்பது எப்படி என்று கண்டு பிடித்தவர் தான் மார்க்ஸ். தொழிலாளிகள் அவனுக்குரி யதை அதிகாரத்தோடு, வலிமை யோடு கேட்கிற உரிமையோடு இருக் கக் கூடாது என்பதற்காகத் தான் சங்கம் வைக்கக் கூடாது என்கின்ற னர். உழைக்கும் வர்க்கம் உறுதியாய் எழத் தொடங்கி விட்ட காலம் என் பதை பார்த்துக் கொண்டிருக்கி றோம். நிரந்தரத் தொழிலாளர் சிலர் நல்ல வேலையில் இருக்கிறேன். தனி யார் மயம், தாராளமயத்தை நான் ஏன் எதிர்க்க வேண்டும் என்று கேட்க லாம். அவர்களுக்கும் விஆர்எஸ் கொடுத்து அனுப்பி விடுவார்கள். நீயா போய்ட்டால் கொஞ்சம் காசு தரு வேன், நானா அனுப்பினால் ஒன்றும் கிடைக்காது என்று மிரட்டப்படுவர். எனவே, கான்ட்ராக்ட், அவுட்சோர் சிங்கை வேடிக்கை பார்த்தால், நிரந் தரத் தொழிலாளிகளின் வேலையைப் பறிப்பதற்கு பல வழிகள் அவர்களி டம் இருக்கிறது. அப்போது அதை எதிர்த்து போராடுகிற வீரியமும் உன் சங்கத்திற்கு இருக்காது. எனவே, தனியார் மயத்திற்கு எதிரான போராட் டத்தில் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றார். இக்கருத்தரங்கில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலா ளர் எஸ்.ராஜேந்திரன் உரையாற்று கையில், தேசத்தில் எல்லா மாநிலங் களுக்கும் வழிகாட்டியாக முதலாளி களிடமிருந்த பேருந்துகளை கைய கப்படுத்தி அரசுடைமையாக்கிய வரலாறு சட்டமன்றத்தில் கம்யூ னிஸ்ட் உறுப்பினர்களின் வலுவான போராட்டத்தால் நடந்தது. அதற்காக அன்று நீதிமன்றம் போனவர்கள், இன்றைக்கு போக்குவரத்து தொழி லாளிக்கு பஞ்சப்படிக்கு தடை கேட்டு நீதிமன்றம் செல்கின்றனர். 50 ஆண்டு கால வரலாறு இன்று திரும்பியிருக் கிறது. அரசு அனைத்தையும் லாப நோக்கத்தில் பார்க்கிறது. மின்சார வாரியத்தில் ஒரு வீட் டிற்கு புது இணைப்பு வழங்கினால் அவர் அதில் ஒரு யூனிட் பயன்படுத் தினால் மின்சார வாரியத்திற்கு ரூ.6 நட்டம் ஆகிறது. ஏனென்றால் உற் பத்திக்கும், விநியோகத்திற்குமுள்ள வேறுபாடு. தமிழகத்தின் இன்றைய மின்சார தேவை 20 ஆயிரத்து 600 மெகாவாட். ஆனால், மின்சார வாரி யம் உற்பத்தி செய்வது வெறும் 9 ஆயிரம் மெகாவாட் மட்டுமே. 7 ஆயிரம் மெகாவாட் ஒன்றிய அரசின் தொகுப்பில் வாங்கிக்கொண்டிருக் கிறோம். இவை போக பற்றாக் குறையை தனியார் முதலாளிகளிடம் வாங்க வேண்டிய நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டிருக்கிறது. அதன் விளைவு வாரியம் நட்டத்தில் இயங்கு கிறது. அதுபோல போக்குவரத்தும் நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கி றது. இந்த அரசு, இந்த துறைகளை யெல்லாம் தனியார் மயமாக்க முயல் கிறது. முதலாளிகளை வாழ வைப்ப தற்குத் தான் அரசு இருக்கிறது. தொழி லாளர்களை வாழ வைப்பதற்கல்ல. அப்படி வர வேண்டுமென்றால் பொதுவுடைமை கட்சி, ஆட்சி அதி காரத்தில் மக்கள் ஜனநாயக புரட்சி மூலம் ஆள்கிறதோ அன்றைக்குத் தான் இந்த நடவடிக்கைகள் மாறும். வலதுசாரி திருப்பம் ஏற்பட்டதன் விளைவு நாம் மட்டும் போராடிக் கொண்டிருக்கிறோம். மற்றவர்கள் பார்வையாளர்களாக கடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்களை நம்மை நோக்கி திருப்பு கின்ற பணியை நாம் செய்ய வேண்டும். என்றார். இக்கருத்தரங்கில், சம்மேளன பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார், அரசு ஊழியர் சங்க மாநில துணைப் பொதுச்செயலாளர் எம். சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர்.