கோவை, ஜன.2- விண்வெளி தொழில் பூங்கா அமைக்க, விவசாயிகளின் வாழ்வா தாரம் பாதிக்காத வகையில் நில எடுப்பு மேற்கொள்ள வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில், அப்பகுதி விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித் தனர். இதுகுறித்து அம்மனுவில் கூறி யிருப்பதாவது, கோவை மாவட் டம், சூலூர் வட்டத்தில் உள்ள காடாம்பாடி, காங்கயம்பாளையம், அப்பநாயக்கன்பட்டி கிராமங்கள் மற்றும் திருப்பூர் மாவட்டம் பல் லடம் வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் சுமார் 200 ஏக்கர் பரப் பளவில் சூலூர் விண்வெளி தொழில் பூங்கா அமைக்க தமிழ் நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற் காக, நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் நில எடுப்பிற்கான அறிவிப்பு டிச.15 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த, நிர்வாகப் ஒப்புதலில் விவசாயிக ளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் முழு புல எண்களை உள்ளடக்கி சீராக வடிவமைக்கப் பட்டு, பாதைகள் தடைபடாமல், விவசாயிகள் பாதிக்காத வகையில் நில எடுப்பு மேற்கொள்ள ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், காடாம்பாடி கிராமம் புல எண்கள் 375, 376, 377, 378, 379, 399, காங்கயம்பாளையம் கிராமம் புல எண்கள் 249, 250, அப்பநா யக்கன்பட்டி கிராமம் புல எண் 1, ஆகியவற்றில் அரசாணையில் ஒப்புதல் வழங்கப்பட்டதற்கு மாறாக, ஒரு பகுதி பரப்பு மட்டுமே நில எடுப்பு மேற்கொள்ளும் பொருட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்புலங்களின் ஒரு பகுதி எல் லையில் சூலூர் விமானப்படைத்த ளச் சுற்றுச்சுவர் அமைந்துள்ளது. மறு எல்லையில் தொழில் பூங்கா அமையும் பட்சத்தில், அதனுடைய சுற்றுச்சுவர் அமைந்துவிடும். இரண்டு பக்கங்களின் சுற்றுச் சுவர்களுக்கு இடைப்பட்ட பகுதியி லுள்ள எஞ்சிய நிலங்கள் முழுமை யாக துண்டிக்கப்பட்டு, செல்ல பாதைகள் இன்றி காணப்படும். இதனால், விவசாயிகளின் வாழ்வா தாரம் முற்றிலும் முடங்கிவிடும் சூழ்நிலை உள்ளது. எனவே, புல எண்களின் முழு பரப்பையும் நில எடுப்பு மேற்கொள்ள வேண்டும். மேலும், இந்த நிலங்கள் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகிலும், சூலூர் விமானப்படைத் தளத்தை ஒட்டியும் அமைந்துள்ளது. இத னால், இப்பகுதியிலுள்ள நிலங்க ளின் சந்தை மதிப்பானது வழிகாட்டி மதிப்பைவிட பல மடங்கு அதி கம். எனவே, தமிழ்நாடு அரசு அரு காமை கிராமத்திலுள்ள, கடந்த மூன்று ஆண்டுகளாக பதிவு செய் யப்பட்ட மொத்த விற்பனை ஆவ ணங்களின் புள்ளிவிவர அடிப்படை யில், உண்மையான சந்தை மதிப் பினை நிர்ணயித்து இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இவ்வாறு, புல எண்களின் முழு பரப்பையும் நில எடுப்பு மேற்கொண்டு, அவைக ளுக்கு உண்மையான சந்தை மதிப்பினை நிர்ணயித்து, அதன் அடிப்படையில் அரசு இழப்பீடு வழங்கும் பட்சத்தில் நிலங்களை கையகப்படுத்த எந்தவித எதிர்ப்பு மின்றி சம்மதம் தெரிவிக்க விவசா யிகள் அனைவரும் முடிவெடுத் துள்ளோம் என தெரிவித்துள்ளனர். இம்மனு அளிக்கையில், மார்க் சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனு டன் திமுக கோவை தெற்கு மாவட் டக் கழக செயலாளர் தளபதி முரு கேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கனகராஜ் மற்றும் விவசாயிகள் உடனிருந்த னர்.