ஈரோடு, ஆக.11- சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் தேவிபாரதிக்கு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர், கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தா ளர் தேவிபாரதிக்கு பாராட்டு விழா மற் றும் எழுத்தளார் ஆ.முத்துக்கண்ண னின் நாச்சாள் கவிதை நூல் வெளியீட்டு விழா ஈரோடு மாவட்டம், எழுமாத்தூரில் சனியன்று நடைபெற்றது. இந்நிகழ் விற்கு தமுஎகச மாவட்டச் செயலாளர் இ.கலைக்கோவன் தலைமை வகித் தார். எழுத்தாளர் ஆ.முத்துக்கண்ணன் வரவேற்றார். ஊராட்சித் தலைவர் சு. ஈஸ்வரமூர்த்தி, கவுன்சிலர் கௌசல்யா குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைப் பொதுச் செயலாளர் அ.லெட்சுமிகாந்தன் கருத் துரையாற்றினார். “நீர்வழிப்படூஉம்” என்ற நூலை முன்வைத்து சுடர்விழி உரை யாற்றினார். இந்நிகழ்வில் சாகித்ய அகா டமி விருதுபெற்ற எழுத்தாளர் தேவி பாரதிக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரி விக்கப்பட்டது. கலை இலக்கிய பெரு மன்ற நிர்வாகி ஜி.வெங்கடாசலம் வாழ்த்தி பேசினார். இதில், சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தி.தங்கவேல், மேனாள் மாவட்டத் தலைவர் ந.சின்னை யன் ஆகியோர் பங்கேற்றனர். தேவி பாரதி ஏற்புரையாற்றினார். தொடர்ந்து, ஆ.முத்துக்கண்ணனின் நாச்சாள் கவிதை நூலை மாநில பொதுச்செயலா ளர் ஆதவன் தீட்சண்யா வெளியீட்டு நிறைவுரையாற்றினார். மாநில துணைச் செயலாளர் அ.கரீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட துணைச் செயலாளர் ஈரோடு சர்மிளா தொகுத்து வழங்கிய நிகழ்வின் முடிவில், மாவட்ட துணைத்தலைவர் சரிதா ஜோ நன்றி கூறி னார்.