தருமபுரி, ஏப்.23- காலிப்பணியிடங்களை உடனடி யாக நிரப்பிட வேண்டும் என்று ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் தருமபுரி மாவட்ட 8 ஆவது மாநாடு மாவட்ட தலைவர் ஜி.சதீஸ்குமார் தலைமை யில் நடைபெற்றது. மாநில செயற் குழு உறுப்பினர் ச.இளங்குமரன் வர வேற்று பேசினார். மாநில பொதுச் செய லாளர் ச.பாரி, மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாநில துணைத் தலைவர் ந.திருவேரங்கன், மாநில செயலாளர் பொ.சார்லஸ் சசிகுமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.சுருளிநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாவட்ட செயலாளர் ப.சங்கர், மாவட்ட பொரு ளாளர் கு.சர்வோத்தமன் ஆகியோர் அறிக்கையை முன்வைத்து பேசினர். மாநில துணைத் தலைவர் இரா.ஆறு முகம் நிறைவுறையாற்றினார். முன்னதாக, இம்மநாட்டில் ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூ லம் மூலம் ஊதியம் வழங்கவேண்டும். பெண் ஊழியர்களுக்கு தனி ஓய் வரை அமைக்க வேண்டும் என்பன உள் ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து மாவட்ட தலை வராக ஜி.சதீஸ்குமார், மாவட்ட செயலாளராக பா.சங்கர், மாவட்ட பொருளாளராக கு.சர்வோத்தமன், மாநில செயற்குழு உறுப்பினராக ச.இளங்குமரன் உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளாக தேர்வுசெய்யப்பட்ட னர்.