கோவை, ஜன.9– ஊழல்களும், முறைகேடுகளையும் அண்டவிடாமல் காக்கும் பெரும் நெருப் பிற்கு நிகரானது செங்கொடி இயக்கம் என கோவை சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு தின கூட்டத்தில் சிபிஐ தேசியக் குழு உறுப்பினர் கே.சுப்பராயன் எம்.பி., உரையாற்றினார். கோவை சின்னியம்பாளையம் தியாகி களின் 76 ஆவது ஆண்டு நினைவு தின கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் தேசியக்குழு உறுப்பினரும், திருப் பூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கே. சுப்புராயன் பேசுகையில், சவால்கள், நெருக் கடிகள், சிக்கல்களுக்கு இடையில், மகா உன்னதமான ஒரு லட்சியத்தை மக்க ளிடம் கொண்டு செல்வதற்காக நடந்த போராட்டத்தில் சின்னியம்பாளையம் தோழர்கள் இன்னுயிரை தந்தார்கள். இதே போல 1943ல் கேரளாவில் கையூரில் 4 தோழர்கள் தூக்கிலிடப்பட்டார்கள். அவர் கள் நால்வரும் மிகவும் இளம் வயது தோழர்கள். இத்தகைய தியாகம் கோவை மட்டுமல்ல, தமிழகம் மற்றும் இந்தியா உள்ளிட்ட உலகெங்கிலும் ஏழு கண்டங்க ளிலும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோழர் கள் தியாகங்களை செய்துள்ளனர்.
இத்த கைய வரலாறு புதர் மண்டி வளர்ந்துள்ள வேறு அரசியல் கட்சிகளுக்கு கிடையாது. மிருகங்களால் கூட தாங்கிக்கொள்ள முடி யாத கொடுமைகளை தாங்கிக் கொண்டு, இந்த இயக்கத்தை காப்பாற்றி கடந்த தலைமுறை நம் கைகளிலே கொடுத்து விட்டு போயுள்ளது. இதனை நாம் பாது காத்து அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும். கம்யூனிஸம் புதைக்கப்பட்டு விட்டது, இனி அவ்வளவுதான் என்றும் பலரும் ஒருகாலத்தில் கருதினார்கள். காற்று புகாத இடங்களிலும் கம்யூனிசம் புகும் என்பதை இப்போது உணர்ந்து விட் டார்கள். உலகின் பல இடங்களிலும் புதைக் கப்பட்ட இடங்களில் இருந்து மீண்டெ ழுந்து போர்களத்திற்கு போர்புரிய வந்து விட்டது கம்யூனிஸ்ட் கட்சி. செங்கொடி இயக்கம் தனது உன்னதமான லட்சியம் நிறைவேறும் வரை தொடர்ந்து போரா டும்,
என்றார். கால்கள் தேய்ந்து விடாமல் இருக்க செருப்பு தன்னைத்தானே தேய்த்துக் கொண்டு கால்களை காப்பாற்றுவதை போல, இந்த மனிதகுலத்தை காப்பாற்று வதற்காக, தங்களது உயிரை அர்ப்ப ணிக்க, மகா உன்னதமான தியாக புரு ஷர்களை கொண்டிருக்கிற இந்தக் கட்சி. உலகையே கபளீகரம் செய்து கொண்டு இருப்பது உலக நிதி மூலதனம், இந்த நிதி மூலதனம் கண்களுக்குப் புலப்படாத தீயசக்தி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உலக நிதி மூலதனமும் கார்ப்ப ரேட் கம்பெனிகளும் கம்யூனிஸ்டுக ளுக்கு எதிராக குறி வைத்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கிற மக் களை ஒன்று திரட்டி உலக நாடுகளில் மேலாதிக்கம் செலுத்தும், செல்வ வளங் களை கொள்ளை அடிக்கும், பொருளா தார மேலாதிக்கம் செலுத்தும் நிதி மூல தனத்தை தகர்க்க போராடுவது கம்யூ னிஸ்ட் இயக்கங்கள்தான். இதனை தடுப்பதற்காகத்தான் மதம் மொழி சாதி வட்டாரம் என்கின்ற உணர்வு களை தூண்டி விட்டு ஒருவரோடு ஒருவர் மோத விடுவதன் மூலம் மக்களின் ஒற்று மையை சிதறடிக்கிறார்கள். இந்த அடை யாள அரசியல் எதிரிகளுக்கு கிடைத்திருக் கிற ஆயுதம். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பது தான் மெய்யான தமிழ் பண்பாடு. தொழிலாளிகள் வர்க்க ஐக்கி யத்தை சிதைக்க அடையாள அரசியல் நடத்துகிறார்கள். தொழிலாளி வர்க்கத்திற்கு ஞானத்தை கற்றுத் தருகிற, மார்க்சி யத்தை கற்றுக்கொடுக்க விடாமல் தடுக் கிற, கண்ணுக்குப் புலப்படாத ஆயுதங் கள் தான் அடையாள அரசியல். மார்க்சி யத்தை கற்று கரை ஏறாமல், அவற்றை நாம் நம் ஊனோடும் உயிரோடும் கலக்கா மல், நிகழ்கால சவால்களை நம்மால் சந் திக்க முடியாது. இந்த செங்கொடி பெரும் நெருப்பிற்கு நிகரானது. எந்த முறைகேடு களையும் அண்டவிடாது. நாம் வீடுவீடாகச் வீடு வீடாக சென்று மனித மனங்களை மண் டிக் கிடக்கின்ற புதர்களை அகற்ற பிரச்சா ரம் மேற்கொள்ள வேண்டும். அதுதான் தற் போதைய தேவை, என்றார். முன்னதாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் கே.காமராஜ் பேசுகை யில், தியாகங்கள் குறித்து இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது. சின் னியம்பாளையம் தியாகிகள், ஸ்டேன்ஸ் மில் தியாகிகள், சேலம் சிறையில் 11 தியாகிகள், உப்பிலிபாளையம் முத்து, பூசாரி, அப்பாவு, திருப்பூர் ஆசார மில் பழனிசாமி என தமிழகம் முழுவதும் எண் ணற்ற போராட்டங்களில் நம்முடைய தோழர்கள் தியாகங்களை செய்திருக்கி றார்கள். தடைகளும் நடந்திருக்கிறது. தலைவர்களும், தோழர்களும் சிறை சென் றுள்ளார்கள். தோழர் ஆர்.என்.கே. 6 ஆண்டுகள் சிறையும், நான்கு ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையும் அனுபவித்தி ருக்கிறார். அதேபோல என்.சங்கரய்யாவும் எட்டு ஆண்டுகள் சிறை வாழ்க்கையும் நான்கு ஆண்டுகள் தலைமறைவு வாழ்க் கையும் அனுபவித்திருக்கிறார்.
நாடு முழு வதும் எண்ணற்ற தோழர்கள் இதுபோன்ற தியாகம் செய்திருக்கிறார்கள். கடந்த 7 ஆண்டுகளாக பட்டியல் போட முடியாத அளவிற்கு பாஜக தவறுகளை செய்து வருகிறது. விவசாயிகளுக்கு எதி ரான சட்டங்களைப் போட்டது. பின்னர் அதை ஓராண்டுக்குப் பின்னர் திரும்ப பெற்றுக் கொண்டது. தொழிலாளர் சட்டங் களை சுருக்கியது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். 1946 ல் மில் முதலா ளிகள் தொழிலாளர்களை ரவுடிகளை வைத்து அடக்கினார்கள். அதற்காகத் தான் சின்னியம்பாளையம் தோழர்கள் உயிர் தியாகம் செய்தனர். அதே பிரச்ச னைகள் தற்போதும் நீடிக்கிறது. தற்போது மில் முதலாளிகள் சுமங்கலி திட்டம் என்ற திட்டத்தின் மூலம் தொழிலாளர்களை நசுக்கி வருகிறார்கள். இதேபோன்று சென் னையில் பாக்ஸ்கான் தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள். இளம் தொழிலா ளர்களின் ரத்தத்தை உழைப்பாக உறிஞ்சு கிறது கார்ப்பரேட் நிறுவனங்கள். இவர்க ளுக்கு காவடி தூக்குகிற வேலையை செய்கிறது மோடி அரசு. கார்ப்பரேட்டுக ளுக்கு எதிரான போராட்டத்தை கூர்மைப் படுத்த வேண்டும். அத்தகைய போராட் டத்தை முன்னெடுக்க சின்னியம்பாளை யம் தியாகிகள் நினைவு நாளில் உறுதி ஏற் போம், என்றார். முன்னதாக, இந்நிகழ்வில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் வி.இராம மூர்த்தி, சிபிஐ மாவட்ட செயலாளர் வி. எஸ்.சுந்தரம், மாநில பொருளாளர் எம். ஆறுமுகம், மாவட்ட துணை செயலாளர் சி.சிவசாமி மற்றும் யு.கே.சிவஞானம், ஆர்.வேலுசாமி, யு.கே.சுப்ரமணியன் உள் ளிட்ட தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.