திருப்பூர், நவ. 1 - இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள சிறுபான் மையினரின் வழிபாட்டு உரிமையை பாதுகாத்திட வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். திருப்பூர் 15 வேலம்பாளையம், அவிநாசி, திருமுருகன் பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்களின் மத வழி பாட்டு உரிமையை பறிக்கும் வகையில் ஒரு சில அதிகாரிகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், 15 வேலம்பாளை யம் மசூதி தொடர்பாக தனி நபர்கள் தொடுத்த வழக்கின் கார ணமாக இஸ்லாமியர்களின் தொழுகை உரிமையை மறுக்கின் றவகையில் அதிகாரிகள் செயல்பட்டு வருவதாகவும், இத்த கைய அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுத்து இந்திய அரசி யலமைப்பு சட்டம் வழங்கியுள்ள வழிபாட்டு உரிமையை பாது காத்திட வேண்டும் என கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கோரிக் கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தின்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.