districts

img

அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

உடுமலை, ஜன.25- அமராவதி அணையிலிருந்து திருப்பூர், கரூர் மாவட்ட பாசன நிலங்கள் மற்றும் குடி நீர் தேவைக்காக வியாழனன்று தண்ணீர் திறக்கப்பட்டது. அமராவதி அணையிலிருந்து ஜனவரி 25  ஆம் தேதி முதல் மார்ச் 15 ஆம் தேதி வரை  பழைய ஆயக்கட்டு 18 ராஜவாய்க்கால் பாச னத்தில் உள்ள 29 ஆயிரத்து 387 ஏக்கர் நிலங் களுக்கு 28 நாள் திறப்பு, 22 நாட்கள் அடைப்பு  என்ற முறையில் மொத்தமாக 50 நாட்கள்  நீர்  வழங்கப்பட உள்ளது.  திருப்பூர், கரூர் மாவட்டங்களில், பழைய ஆயக்கட்டு பாசனத்தில் அலங்கியம் முதல் கரூர் வரை 18 வாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட 29 ஆயி ரத்து 387 ஏக்கர் நிலங்க ளுக்கு ஆற்று மதகு வழி யாக 2229.12 மில்லியன் கன  அடி தண்ணீர் திறக்கப்படுகி றது. அதேபோல, புதிய  ஆயக்கட்டு பாசனத்திலுள்ள 25 ஆயிரத்து 250 ஏக்கர் நிலங்களுக்கும் பிரதான கால்வாய் மூலம் 1064.45 மில்லியன் கன அடி திறக்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில், அமராவதி ஆறு பிரதான கால்வாயில் வியாழக்கிழமை முதல்  3293.57 மில்லியன் கன அடி தண்ணீர் 50  நாட்கள் தகுந்த இடைவெளியில் 28 நாட்கள்  அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்ப டும் என்று பொதுப்பணித்துறை தெரிவித்து உள்ளது. அமராவதி அணையின் நீர்மட்டம்  மொத்தமுள்ள 90 அடியில், 89.57 அடியாக வும், நீர்வரத்து வினாடிக்கு 191 கன அடியா கவும் உள்ளது.