districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலையீட்டால் தீர்வு

ஈரோடு, மார்ச் 28- ஈரோடு மாவட்டத்தில் மாற் றுத்திறனாளிகளுக்கான பேருந்து அட்டை புதுப்பித்து வழங்கும் முகாமில் முறை கேடு நடப்பதாகப் புகார் எழுந் துள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற் றுத்திறனாளிகளுக்கான பேருந்து பயண அட்டை புதுப் பித்து வழங்கும் நிகழ்ச்சி செவ் வாயன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று ஏராளமானோர் பேருந்து பயண அட்டை களை புதுப்பித்து பெற்றனர். இதனைத் தொடர்ந்து கண்ணாடி, கைத்தடி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதனை  நூற்றுக்கும் மேற்பட்டோர் பெற்றுச் சென்ற நிலையில் தமிழ்நாடு அனைத்து மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்க தலைவர் சாவித்திரி  அரு கில் செல்லும் போது டோக்கன் கொடுத்து அமர வைக்கப்பட்டார்.  தரகர்களின் துணை யோடு வழங்கப்படுவதால் மாற்றுத்திறனா ளிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுப் போரைப் பார்த்தவுடன் அச்சமடைந்து டோக் கன் விநியோகம் செய்யப்படுகிறது.

ஏன் என கேள்வி எழுப்பினார். தகவலறிந்து சங்கத் தின் பொறுப்பாளரும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப் பினருமான ப.மாரிமுத்து அங்கு சென்றார்.  இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரும் இறங்கி வந்தார். அவர் முன்னிலையில் அமைதியாக நடந்து கொண் டிருந்த நிகழ்ச்சியில், நான் அருகில் வந்த போது உடனிருந்தவர் எதற்கு சைகை செய்தார். ஏன் டோக்கன் விநியோகம் நடந் தது என சாவித்திரி கேள்வி எழுப்பினார். அதற்கு அலுவலர் வருத்தம் தெரிவித்தார்.  இதன்பின்னர், அனைவருக்கும் முறைப் படி உபகரணங்கள் வழங்கப்பட்டது. மார்க் சிஸ்ட் கட்சியின் தலையீட்டால் பசியோடு காத்திருந்த மாற்றுத்திறனாளிகள் உபகர ணங்களைப் பெற்றுச் சென்றனர். முன்ன தாக, நடைபெற்ற விவாதத்தால் மாவட்ட ஆட் சியர் அலுவலக பகுதியில் சிறிதுநேரம் பர பரப்பு ஏற்பட்டது.