தாராபுரம், பிப்.7- தாராபுரம் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட் டணி சார்பில் தாராபுரம் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் உடுமலை சாலை யில் உள்ள சிவரஞ்சனி மகாலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், 30 வார்டுகளிலும் போட் டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசு கையில், நடைபெற உள்ள நகராட்சி தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். தமிழக அரசின் மகத்தான திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் முழு மனதோடு கட்சி முடிவை ஏற்றுக் கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு திமுக மற்றும் கூட் டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்றார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கயல்விழி செல் வராஜ், திமுக நகர செயலாளர் கே.எஸ்.தனசேகர், ஒன்றிய செயலாளர் எஸ்.வி.செந்தில்குமார், காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் தென்னரசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்முத்து, சிபிஎம் தாலுக்கா செயலாளர் என்.கனகராஜ் மற்றும் கட்சி நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.