அருந்ததியர் மூன்று சதவீத உள்ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று, கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திராவிடத் தமிழர் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை கொடுத்து வரவேற்றனர். இந்நிகழ்வில், சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம், கே.எஸ்.கனகராஜ், திராவிடர் தமிழர் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பேரறிவாளன், மாநிலத் துணை பொது செயலாளர் ஆதித்தமிழன், மாநகர செயலாளர் திலீபன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.