ஈரோடு, பிப்.6- ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே உள்ள இருகாலூர் பகுதியில் பதுங்கியுள்ள சிறுத்தையை பிடிக்க 3 ஆவது நாளாக தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு, திருப்பூர் மாவட்ட எல்லையான பாப்பாங்குளம் பகுதியில் கடந்த சில நாட் களுக்கு முன்பு ஒரு சிறுத்தை சோளக்காட் டில் பதுங்கி இருந்தது. இதையடுத்து வனத் துறையினர் மயக்க ஊசி செலுத்தி சிறுத் தையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இதைத்தொ டர்ந்து கடந்த சில நாட்களாக, ஈரோடு மாவட்டம் நம்பியூரில் உள்ள காந்திபுரம் பகு தியில் இரவில் சிறுத்தை நடமாட்டம் மீண் டும் அதிகரித்து வருகிறது. மேலும், ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளையும் வேட் டையாடியது. இந்நிலையில், மீண்டும் நம்பி யூர் அருகே உள்ள இருகாலூர் என்ற கிரா மத்தில் பொன்காத்த அய்யன் கோவில் குளம் என்ற பகுதியில் வெள்ளியன்று சிறுத்தையின் உறுமல் சத்தம் கேட்டதை யடுத்து, அப்பகுதி பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது சிறுத்தை உலாவிக் கொண்டிருந்ததை கண்டு பொது மக்கள் அச்சமடைந்து, வனத்துறையின ருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த டி.என்.பாளையம் வனச்சரகர் கணேஷ் பாண்டியன், வனத்துறை மருத்துவர் சதா சிவம் மற்றும் வனத்துறை ஊழியர்கள், சிறுத்தை பதுங்கியிருந்த இடத்தில் 6 தானி யங்கி கேமராக்களை பொருத்தினர். மேலும், இரவு நேரம் ஆகியதால், வனத் துறையினருடன், கிராம மக்களும் சேர்ந்து செல்போன் டார்ச்லைட் மற்றும் மின் விளக்குகள் மூலம் விடிய விடிய சிறுத் தையை தேடினர். மேலும், இருகாலூர் பகுதி யில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் வனத்துறை சார்பில் தண்டோரா மூலம் எச்சரிக்கை செய்யப்பட் டது. வனத்துறையினர், தன்னார்வலர்கள் பொன்காத்த அய்யன் கோவில் குளத்து பகுதியில் 2 பிரிவாக பிரிந்து 3 ஆவது நாளாக சிறுத்தையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், ட்ரோன் கேமரா மற்றும் தானியங்கி கேமரா மூலம் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து கண் காணிக்கவும் வனத்துறையினர் நடவ டிக்கை எடுத்து வருகின்றனர். சிறுத்தையை பிடிக்கும் வரை பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.