திருப்பூர், மார்ச் 11 - எல்ஐசி பங்குகளை விற்பனை செய்வ தற்கு எதிர்ப்புத் தெரிவித்து காப்பீட்டு ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் ஜம்மனை பகுதியில் உள்ள எல்.ஐ.சி கிளை அலுவலகம் முன்பு எல்.ஐ.சி. பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி போராட் டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் சஞ்சய்ராஜா தலைமை ஏற்றார். சங்கப் பொருளாளர் ரங்கராஜ், முகவர் சங்கத்தின் பொறுப்பா ளர் பரணிதரன் மற்றும் திருப்பூர் எல்ஐசி கிளையின் ஊழியர்கள், முகவர்கள் பெருவாரியாக கலந்து கொண்டனர். தாராபுரம் தாராபுரம் எல்ஜசி அலுவலகம் முன்பு எல்ஜசி பங்கு விற்பனைக்கு எதிராக அகில இந்திய இன்ஸ்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தாரா புரம் கிளை தலைவர் கோவிந்தசாமி, செய லாளர் சிவப்பிரகாசம் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். அவிநாசி எல்ஜசி பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவிநாசி எல்ஐசி அலுவல கம் முன்பு வியாழக்கிழமை மாலை மெழுகு வர்த்தி ஏந்தி எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.