பாமாயில், பருப்பை உரிய காலத்திற்குள் வழங்க அறிவுறுத்தல்
பாமாயில், பருப்பை உரிய காலத்திற்குள் வழங்க அறிவுறுத்தல் தருமபுரி, செப்.27- அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் பாமாயில், பருப்பை உரிய காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று அதி காரிகளுக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அறிவு றுத்தியுள்ளார். தருமபுரி மாவட்ட வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், இரண்டாம் காலாண்டுக்கான மாவட்ட கண்கா ணிப்புக்குழு கூட்டம், ஆட்சியரகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமை வகித்தார். இக்கூட்டத் தில் பொது விநியோகத் திட்ட செயல்பாடுகள் குறித்தும், தரமான பொருள்கள் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப் பட்டது. இதன்பின் ஆட்சியர் பேசுகையில், அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் பாமாயில், பருப்பு ஆகியவற்றை உரிய காலத்திற்குள் விநியோகம் செய்யப்பட வேண்டும். செப்டம்பர் முதல் டிசம்பர் மாதம் வரைக்குமான பொருட் கள் முன்நுகர்வு செய்திட வேண்டும். பொருட்களின் எடை, தரம் சரியாக இருப்பதை துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும், என்றார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலு வலர் பால்பிரின்ஸி ராஜ்குமார், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் செம்மலை, நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் தேன்மொழி, கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர் அன்பழகன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் யசோதா மதிவாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
போலி மருத்துவர்கள் கைது
போலி மருத்துவர்கள் கைது தருமபுரி, செப்.27- போலியாக அலோபதி மருத்துவம் பார்த்த 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், அரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ அலுவலராக மதன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் போலி மருத்துவர்கள் கண்டறியும் குழுவில் உள்ளார். இந்நிலையில், போலி மருத்துவர்கள் குறித்து இவருக்கு கிடைத்த தகவலின்பேரில், அரூர் அருகே உள்ள கோபிநாதம் பட்டி பகுதியில் போலி மருத்துவர்கள் கண்டறியும் குழுவி னர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஸ்ரீசவந்தினி மெடிக் கல்ஸ் கடை பின்புறத்தில் அலோபதி மருத்துவம் பார்த்த போலி மருத்துவரான பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தாளநத் தம் அருகே உள்ள காவேரிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜ் குமார் (29) என்பரை பிடித்தனர். அதன்பின் அவரை அலோபதி உபகரணங்களுடன் மொரப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத் தனர். அதேபோல், பாலக்கோடு அருகே உள்ள அமானி மல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் (38), அதே பகுதியில் வெங்கடேஸ்வரா மெடிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். அந்த கடையில் அலோபதி மருத்துவம் பார்த்து வந்த இவரை பிடித்து, மொரப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து போலி மருத்துவர்களான ராஜ்குமார், ராமச் சந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோதமாக உளிகற்கள் கடத்தல்
சட்டவிரோதமாக உளிகற்கள் கடத்தல் தருமபுரி, செப்.27- சட்டவிரோதமாக உளிகற்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப் பட்ட லாரியை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளரை அதி யமான்கோட்டை காவல் துறையினர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், மிட்டா நூல அள்ளி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் மோனகன்ராஜ் (34). இவ ருடன் தருமபுரி வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் ஆகி யோர் வியாழனன்று காலை நூலஅள்ளியில் இருந்து முக்கள் நாயக்கம்பட்டி செல்லும் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை மடக்கி சோதனை செய்ததில், அரசு அனுமதியின்றி உளிகற்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்ட நிலையில், லாரியை அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் ஒப்ப டைத்தனர். இதுகுறித்து அதியமான்கோட்டை காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து, லாரியின் உரிமையாளரான அன்னசாகரம் பகுதியைச் சேர்ந்த அழகு (46) என்பவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
பாலக்கோடு பேரூராட்சி மன்றக் கூட்டம்
தருமபுரி, செப்.27- பாலக்கோடு பேரூராட்சி மன்ற கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூ ராட்சி மன்றத் தலைவர் பி.கே.முரளி தலை மையில், மன்ற கூட்டம் வியாழனன்று பேரூ ராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. செயல் அலுவலர் இந்துமதி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், பேரூராட்சிக்குட்பட்ட பகுதி களில் சொத்துவரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரி இனங்களுக்கு தாமதமாக வரி செலுத்துவோ ருக்கு ஒரு சதவிகிதம் வட்டி விதிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. 15 ஆவது நிதிக்குழு மானியம், 6 ஆவது நிதிக் குழு மானிய திட்டத் தின் கீழ் பேரூராட்சி பகுதியில் பல்வேறு அடிப் படை வசதிகளை மேற்கொள்வது, பாலக் கோடு பேரூராட்சி நகரப் பகுதியில் பிளாஸ் டிக் அதிகரிப்பை கட்டுப்படுத்துவது, கழிவுநீர் ஓடைகளைத் தூர்வாரி, கொசு மருந்து தெளிப் பது, அரசின் மூலதன மானிய நிதியிலிருந்து பேரூராட்சிக்கு புதிய கட்டடம் கட்டும் பணி யைத் தொடங்குதல் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில், பேரூராட்சி துணைத் தலைவர் தாஹசீனா இதாயத்துல்லா நன்றி கூறினார்.
தனியார் மதுபானக்கூடத்திற்கு எதிர்ப்பு
பொள்ளாச்சி, செப்.27- பொள்ளாச்சியை அடுத்த மீனாட்சிபுரம் பகு தியில் தனியார் மதுபானக்கூடம் திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள், குழந்தைக ளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள திவான்சாபுதூர் ஊராட்சியில், தமிழக - கேரள எல்லையில் உள்ள மீனாட்சிபுரம் கிரா மத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தி வந்த நிலையில் இடத்தின் அருகில் தனியார் மது பானக்கூடம் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில், பெண்கள் தங்களது குழந்தைகளுடன் கலந்து கொண் டனர். பொள்ளாச்சி - மீனாட்சிபுரம் சாலை யில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சம்பவத்திற்கு வந்த ஆனை மலை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர் களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர் கள் கலைந்து சென்றனர். மீனாட்சிபுரம் அருகே உள்ள தனியார் மதுபான கடையை மூடாவிட்டால் தொடர்ந்து பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படும் என பொது மக்கள் தெரிவித்தனர்.
வக்பு திருத்த மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மேட்டுப்பாளையம், செப். 27- வக்பு திருத்த மசோதாவை கண்டித்து மேட்டுப்பாளையத்தில் வெள்ளியன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே ஐக்கிய ஜமாத் பேரவை மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கூட்டமைப்பு சார் பில், வக்பு திருத்த மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஐக்கிய ஜமாத் பேரவை தலைவர் ஹாஜி முகமது ஷெரிஃப் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில், வக்பு வாரிய சொத்துக்களை அபகரிக்க நினைக்கும் ஒன்றிய அரசின் மசோதாவை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் அய்யூப், ஐக்கிய ஜமாத் பேரவைச் செயலாளர் அக்பர் அலி, எஸ்டி பிஐ நகரத் தலைவர் அப்பாஸ், தமுமுக மாவட் டத் தலைவர் அப்துல் ஹக்கீம், காட்டூர் பள்ளிவாசல் தலைமை இமாம் முகமது இலி யாஸ், சின்ன பள்ளிவாசல் இமாம் முஹை தீன் சிராஜி உள்ளிட்ட 500க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஏரியில் மண் எடுப்பதை தடுத்திடுக
ஏரியில் மண் எடுப்பதை தடுத்திடுக நாமக்கல், செப்.27- சாலை அமைக்கு பணிக்கு ஏரியிலிருந்து மண் எடுப்ப தாக அப்பகுதி மக்கள் அட்சியரிடம் புகாரளித்துள்ளனர். நாமக்கல் சுற்றுவட்டச் சாலை அமைக்க வீசாணம் ஏரியில் இருந்து மண் எடுக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் சார்பில் ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நாமக்கல் அருகே வீசாணம் கிராமத்தில் மக்கள் பயன்பாட்டுக்கும், விவசாய தேவைக்குமாக சின்ன ஏரி, பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியின் அருகில் சுற்றுவட்டச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலை அமைக்கும் பணி ஒப்பந்த முறையில் நடை பெற்று வருகிறது. அந்த ஒப்பந்ததாரார் இரவு நேரத்தில் ஏரி யில் இருந்து மண்ணை அள்ளி சாலைப் பணிக்கு பயன்ப டுத்தி வருகிறார். இதனால் மழைக் காலங்களில் இரு ஏரிகளும் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளது. பொதுமக்கள் தரப் பில் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் கேட்டால், மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் மண் அள்ளுவதாக கூறுகிறார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து சின்ன ஏரி, பெரிய ஏரி இரண்டையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
விலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு விரைந்து இழப்பீடு வழங்க வேண்டும்
திருப்பூர், செப்.27- வன மற்றும் வீட்டு விலங்குகளால் பாதிக் கப்படும் விவசாயிகளுக்கு, தமிழ்நாடு அரசு விரைந்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்டம் உடுமலை, காங்கேயம், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் வன மற்றும் வீட்டு விலங்குக ளால் தொடர்ந்து விவசாய பயிர்கள் சேதப்ப டுத்தப்பட்டு வருகிறது. மேலும், கால்நடை களும் தாக்குதல்களுக்கு உள்ளாகி வரு கிறது. வன மற்றும் வீட்டு விலங்குகளால் ஏற் படும் பாதிப்பால் விவசாயிகள் நிம்மதி இழந்து, கடும் மன உளைச்சலுக்கும், பொரு ளாதார இழப்புக்கும் ஆளாகி வருகின்ற னர். குறிப்பாக காட்டுபன்றி, மான்கள், மயில்கள், வெறிநாய்கள் போன்றவைக ளால் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து விவசாயிகள், விவசாய அமைப்புகள் பல கட்ட போராட்டங்கள் நடத்தியுள்ளனர். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது. தற் போது நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட ஆட் சியர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக உள் ளாட்சி நிர்வாகங்களின் பொது நிதியை பயன் படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது. நாய்களுக்கு கருத்தடை செய்ய நாய் ஒன்றுக்கு சில ஆயிரம் செலவு செய்யும் அரசு, உயிரிழந்த ஆடுகளுக்கு குறைந்தபட்ச நிவாரணத்தை கூட வழங்காமல் இருப்பது பொருத்தமல்ல. கடந்த காலங்களின் தொடர் நடவடிக்கையாக இருந்தாலும், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிவார ணம் வழங்க உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். இது விவசாயிகள், அதி காரிகள் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக பார்க் கப்படுகிறதோ என்ற ஐயப்பாடு எழுகிறது. அதற்கு இடம் கொடுக்காமல் தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து பாதிக்கப்ப டும், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என கூறப்பட்டுள் ளது.
குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண சிபிஎம் வலியுறுத்தல்
உடுமலை, செப்.27- குடிமங்கலம் ஒன்றியப் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடுகளில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடி மங்கலம் ஒன்றியக்குழுவின் கிளை மாநாடு கள் நடைபெற்று வருகிறது. இதில், குடிமங்க லம் பகுதிகளுக்கு திருமூர்த்தி அணையில் இருந்து கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம் தரப்படும் குடிநீர் முறையாக வழங்கப்படு வதில்லை. இதனால் அனைத்து ஊராட்சிகளி லும் குடிநீர் பிரச்சனை நிலவுகிறது. இதற்கு போர்கால அடிப்படையில் தீர்வு காண வேண் டும். ஊரக வேலை திட்டத்தை பாதுகாக்கும் வகையில் தொடர்ச்சியான வேலை மற்றும் கூலி வழங்க வேண்டும். வீடு இல்லாத ஏழை மக்களுக்கு தமிழக அரசு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். குடிமங்கலம் அரசு மருத் துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என் பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. இதை தொடர்ந்து வீதம்பட்டி கிளைச் செயலாளராக பழனியம்மாள், ராமசந்திராபுரம் கிளைச்செயலாளராக விஜயகுமார், அணிக்கடவு கிளைச் செயலா ளராக ராஜேகுமார், எஸ்.வல்லாக்குண்டா புரம் கிளைச் செயலாளராக மாரிமுத்து, பெதவை மாதர் கிளைச் செயலாள ராக கலைவாணி, புக்குளம் கிளைச் செயலா ளராக மந்திரியப்பன், கொங்கல்நகரம் கிளைச் செயலாளராக மணியன், கொங்கல்ந கரம் மாதர் கிளைச் செயலாளராக சரஸ்வதி, வடுகபாளையம் கிளைச் செயலாளராக ஆறு முகம், மூங்கில் தொழுவு கிளைச் செயலாள ராக தண்டபாணி, சிக்கனூத்து கிளைச் செய லாளராக ஜெகதீசன், கோட்டமங்கலம் கிளைச் செயலாளராக முருகன், எ.அம்மா பட்டி கிளைச் செயலாளராக சுப்பிரமணியன், எல்.என். புதூர் கிளைச் செயலாளராக வேல் மணி, வாகத்தொழுவு கிளைச் செயலாளராக மாரியப்பன், முகவனூர் கிளைச் செயலாளா ரக பழனிச்சாமி, பெதப்பம்பட்டி கிளைச் செய லாளராக ராஜகோபால், நஞ்சேகவுண்டன் புதூர் கிளைச் செயலாளராக நிர்மலா, வி. வல் லக்குண்டாபுரம் கிளைச் செயலாளராக திரு மலைசாமி, குடிமங்கலம் கிளைச் செயலாள ராக குமார் மற்றும் குடிமங்கலம் நால்ரோடு பகுதி கிளைச் செயலாளராக ராசாத்தி ஆகி யோர் புதிய கிளைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்கள். மேலும், குடிமங்கலம் ஒன்றியக்குழுவின் 24 ஆவது மாநாடு வரும் 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோட்டமங் கலம் ஸ்ரீ அன்பு மஹாலில் நடைபெறுகிறது.
நியாய விலைக் கடையை முறையாக செயல்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை
உடுமலை, செப்.27- உடுமலை தாலுகா பள்ளபாளை யம் ஊராட்சி கொங்கலக்குறிச்சி யில் செயல்படும் பகுதிநேர நியாய விலைக்கடையை முறையாக செயல்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தினர். பள்ளபாளையம் ஊராட்சி கொங் கலக்குறிச்சியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இங்கு பாள்ளபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் பகுதி நேர நியாய விலைக் கடை செயல்பட்டு வந்தது. இதில், வார இறுதி நாளான சனிக்கிழமை பொருட் கள் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது இக்கடை எப்பொழுதும் பூட்டியே காணப்படுகி றது. மேலும், கடையில் வேலை செய் யும் ஊழியர் தனக்கு பிடித்த நபர்க ளுக்கு மட்டும் கடை திறக்கும் நாள் குறித்து தகவல் தருகிறார். மேலும், அவருக்கு பிடித்த நாட்களில் கடை திறக்கிறார். இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் வழக் கம் போல சனிக்கிழமை நியாய விலைக்கடையை திறக்க நடவ டிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும், கடையை முறையாக திறக் காத ஊழியர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கொங்கலக்கு றிச்சி கிளையின் சார்பில் போராட்டம் நடைபெறும் எனதெரிவிக்கப்பட்டுள் ளது. இது குறித்து உடுமலை குடிமை பொருள் வட்டாட்சியரிடம் கேட்ட போது, கொங்கலக்குறிச்சி நியாய விலைக் கடை கூட்டுறவு சங்கத் தின் கீழ் வருவதால், அந்த துறை அதிகாரிகளிடம் கடை குறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், துறை அதிகாரிகள் நடவ டிக்கை எடுப்பார்கள் என்று தெரி வித்தார். இது குறித்து பள்ளபாளை யம் தொடக்க வேளாண்மை கூட்டு றவு சங்கத்தின் செயலாளரிடம் கேட்ட போது, கொங்கலக்குறிச்சி கடை இனி வரும் காலத்தில் சனிக்கி ழமை திறக்கப்படும். மேலும், தற்பொ ழுது வேலை செய்யும் ஊழியரை வேறு கடைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நீர்நிலையை சுடுகாடாக மாற்றுவதா?
நீர்நிலையை சுடுகாடாக மாற்றுவதா? ஈரோடு, செப்.27- அந்தியூர் பொய்யேரிக் கரையில் உயர்நீதிமன்ற உத்தர வையும் மீறி நீர்நிலை புறம்போக்கு இடத்தில் முதிய வரின் சடலத்தைப் புதைத்த உறவினர்கள் மீது காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த பொய்யேரிக்கரை யைச் சேர்ந்தவர் பெரியகுட்டி (73). வயது மூப்பால் புதனன்று உயிரிழந்தார். இதனால், உறவினர்கள் அப்பகுதியில் உள்ள பொய்யேரிக்கரையில் நீர்நிலை புறம்போக்கு இடத்தில் சடலத்தை புதைத்துள்ளனர். இறந்தவர்களின் உடலை நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் புதைக்கக்கூடாது என சென்னை உயா்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி சடலத்தைப் புதைத்த பெரியகுட்டி உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அந்தியூர் நிலவருவாய் ஆய்வாளர் செந்தில்ராஜா புகார் அளித்தார். இதன்பேரில், அந்தியூர் காவல்துறையி னர் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்ற னர்.
மேட்டுப்பாளையம் நகர் மன்ற கூட்டத்தில் அதிமுகவினர் தகராறு: சஸ்பென்ட்
மேட்டுப்பாளையம் நகர் மன்ற கூட்டத்தில் அதிமுகவினர் தகராறு: சஸ்பென்ட் மேட்டுப்பாளையம், செப்.27- மேட்டுப்பாளையம் நகர்மன்ற கூட்டத்தில் திமுக - அதிமுக உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்ட அரங்கினுள் தண்ணீர் டம்ளரை தூக்கி எறிந்தும், தீர்மான நகலை கிழித்தெறிந்தும் வன்முறையில் ஈடுபட்டதாக அதிமுக உறுப்பினர்கள் 9 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சியின் நகர்மன்ற சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் மெஹ ரீபா பர்வீன் தலைமையில் நகராட்சி ஆணையர் அமுதா முன்னிலையில் வெள்ளியன்று காலை துவங்கியது. இதில், நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளில் திமுக மற்றும் இதன் கூட்டணி கட்சியை சேர்ந்த 24 கவுன்சிலர்கள் மற்றும் அதிமுக சார்பில் 9 கவுன்சிலர்கள் உள்ளனர்.. இந்நிலையில், வெள்ளியன்று காலை நகர் மன்ற அரங்கில் கூட்டம் துவங்கியது முதல் திமுக அதிமுக உறுப்பினர்களுக் கிடையே தெரு விளக்கு பிரச்சினை மற்றும் நகராட்சி அதிகாரி களின் செயல்பாடு குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அதிமுக 7 ஆவது வார்டு உறுப்பினர் சலீம். அருகில் தண்ணீர் வைக்கப்பட்டிருந்த சில்வர் டம்ளரை தூக்கி எறிந் தார். இதேபோல, அதிமுக 18 ஆவது வார்டு உறுப்பினர் சுனில் குமார் தீர்மான நகலை கிழித்து எறிந்தார். இதனால் நகர்மன்ற கூட்ட அரங்கில் அசாதாரண சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து, திமுக, அதிமுக உறுப்பினர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் தாக்கி கொள்ளும் பதட்ட நிலை ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, நகர்மன்றத் தலைவரின் உத்தரவின்படி காவல்துறையினர் அரங்கினுள் நுழைந்து சமாதானம் செய்தனர். மேலும், நகர் மன்ற உறுப்பினர்கள் இடையே மோதல் ஏற்படாமல் தடுத்து பாதுகாப்பு அளித்தனர். இதனையடுத்து அதிமுக உறுப்பினர் கள் கூட்ட அரங்கின் நடுவே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனையடுத்து, தொடர்ந்து இது போன்று நகர்மன்ற கூட்டங்க ளில் வன்முறையை தூண்டும் வகையில் அதிமுக உறுப்பி னர்கள் செயல்படுவதால் அடுத்து வரும் இரண்டு கூட்டங்க ளுக்கு அதிமுக உறுப்பினர்கள் 9 பேரும் சஸ்பென்ட் செய்யப் படுவதாக நகர்மன்றத் தலைவர் மெஹரீபா பர்வீன் உத்தரவிட் டார்.
கொடநாடு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
உதகை, செப்.27- கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அக்.25 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை உத கையிலுள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் வெள் ளியன்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்து வந்த மாவட்ட நீதிபதி அப்துல்காதர், மதுரை நீதிமன்ற பதிவா ளராக பணியிட மாற்றத்தில் சென்றதால் குடும்ப நல நீதி மன்ற நீதிபதி லிங்கம் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டபட்டோர் தரப்பில் வாளையாறு மனோஜ் மட்டுமே ஆஜரானார். இவ்வழக்கை விசாரித்த பொறுப்பு நீதிபதி லிங்கம் வழக்கை அக்.25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.