districts

அதிகாரிகளின் அலட்சியம்: வாகன ஓட்டிகள் அவதி

தருமபுரி, ஆக.5- அரூர் அருகே முறையாக மாற்றுப் பாதை அமைக்காமல் நான்கு வழிச் சாலை பணியில் ஒப்பந்ததாரர்கள் ஈடு பட்டு வருவதை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இதனால் வாகன ஓட் டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். தருமபுரி முதல் திருவண்ணாமலை  வரை ரூ.410 கோடி மதிப்பில் நடை பெற்று வரும் நான்கு வழிச்சாலைகளை தரமான சாலையாக அமைக்க தமிழ் நாடு அரசு மூலமாக ஒப்பந்தங்கள் விடப் பட்டது. எட்டு ஒப்பந்ததாரர்கள் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியில் 6 மாதத்திற்கும் மேலாக ஈடுபட்டு வரு கின்றனர். ஒப்பந்ததாரர்கள் பழைய தார்ச் சாலையை அகற்றாமல், ஜல்லிக்கற் கள், மண் கொட்டி சாலை அமைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்ற னர். இப்படி சாலை அமைப்பதால் வரும் காலங்களில் அந்த சாலை தரமானதாக இல்லாமல், பழைய சாலையாக மாறும் நிலை ஏற்படும்.. இதனை, துறை சார்ந்த  அலுவலர்களும், மாவட்ட நிர்வாகமும் இதனை கண்டு கொள்ளாமல் இருப்ப தால், அரசு அலுவலர்களின் கண்கா ணிப்பு இன்மையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, ஒப்பந்ததாரர் கள் பழைய சாலையை அகற்றாமலேயே சாலைப்பணியை மேற்கொண்டு வரு கின்றனர். இதனிடையே அரூர் முதல் அழகிரி  நகர் வரை தனியார் ஒப்பந்ததாரர், நான்கு வழிச்சாலை பணிகளை மேற் கொண்டு வருகிறார். பேருந்துகள், கன ரக வாகனங்கள், இருசக்கர வாகனங் கள் பாதுகாப்பாக சென்று வர முறை யான மாற்றுப்பாதை அமைக்காமல் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாற்றுப்பாதை இல்லாத தால் பழைய சாலையில் கொட்டி  வைக்கப்பட்டுள்ள ஜல்லிகற்கள் கனரக வாகனம், பேருந்துகள் செல்லும்போது வேகமாக சிதறி விழுகின்றன.

இத னால் இருசக்கர வாகனத்தில் செல் வோர், நிலைத்தடுமாறி கீழே விழுகின் றன. அதுமட்டுமல்லாமல் சாலையில்  செல்லும் பேருந்து, கனரக வாகனங் கள் அதிவேகமாக செல்லும்போது சாலையில் இருக்கும், மண் புகை மண்ட லமாக மாறி இருசக்கர வாகனங்கள் ஓட்ட முடியாத அளவிற்கு விபத்தை ஏற் படுத்தும் நிலையில் இருந்து வருகிறது. வாகனங்களால் ஏற்படும் தூசுகள் கார ணமாக பகலிலும், இருசக்கர வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை போட்டுக் கொண்டு செல்லும் நிலை உள்ளது. மேலும், தருமபுரி தொடங்கி திரு வண்ணாமலை மாவட்ட எல்லை வரை வடிகால் வசதி அமைக்கப்படும் பகு திகளில், முறையான அளவீடுகளை பின் பற்றாமல், நிலங்களை நெடுஞ்சாலைத் துறை ஆக்கிரமிப்பு செய்து, கடை மற் றும் வீடுகள் கட்டிய நபர்களிடம் குறிப் பிட்ட தொகையை வாங்கிக்கொண்டு, வடிகால் வசதி பணியை செய்து வருவ தாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, ஒப்பந்ததாரர்கள் மீதும், துறை சார்ந்த அலுவலர்கள் மீதும் தமிழ்நாடு  அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.