தருமபுரி, ஏப்.3- குழந்தைகளுக்கான மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியு றுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங் கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 30 ஆண்டுகாலமாக பணிபுரிந்து வரும் சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப் பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும். குழந்தைகளுக்கான மானி யத்தை உயர்த்தி வழங்க வேண்டும். காலை உணவு திட்டத்தை சத்துணவு திட்டத்துடன் இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழி யர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் ஒன்றிய தலைவர் எம்.ஜெயந்தி தலைமை ஏற்றார். மாவட்ட பொருளாளர் வளர்மதி, ஒன்றிய செயலாளர் ரீனா, மாவட்ட துணைத்தலைவர் ராமன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.சேகர், மாவட்ட நிர்வாகிகள் ஆர்.ஜெயவேல், கும ரன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். நல்லம்பள்ளியில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் துரை தலைமை வகித்தார். மாநி லச் செயலாளர் பெ.மகேஸ்வரி, மாவட்ட தலைவர் சி.காவேரி, ஒன்றிய செயலாளர் ஜெயா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் சந்திரன், வட்ட செயலாளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று மாவட்டம் முழுவதும் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.