உதகை, ஜூலை 13- கோத்தகிரியில் மழை காரணமாக பசுந்தேயிலை மகசூல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் தேயிலை அறுவடை செய் யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதா னமாக உள்ளது. இதை நம்பி 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு தேயிலை விவசாயிகள், தேயிலை தொழிற்சாலை தொழி லாளர்கள் உள்ளனர். கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதி களில் போதுமான மழை பெய்ததாலும், இதமான காலநிலை நிலவி வருவதாலும் தேயிலை தோட்டங்களில் உள்ள செடிக ளில் தற்போது கொழுந்துகள் வரத்து அதிகரித்து வருகிறது. தற்போது பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையாக கிலோவுக்கு ரூ.15 என தேயிலை வாரியம் நிர்ண யித்துள்ளது. இந்த விலை விவசாயிகளுக்கு போதுமான தாக இல்லை. கொள்முதல் விலை குறைவாக இருப்பினும், தற்போது தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளது, விவசாயி களுக்கு சற்று ஆறுதலாக உள்ளது. இந்நிலையில், தேயிலை பறிப்பதற்கு போதிய தொழிலா ளர்கள் கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் தேயிலை கொழுந்துகளை கையால் அறு வடை செய்யும் எந்திரம் மூலம் அறுவடை செய்து வருகின் றனர். சில விவசாயிகள் பேட்டரியால் இயங்கும் மோட் டார் மூலம் அறுவடை செய்யும் எந்திரம், விரைவாக தேயிலை அறுவடை செய்யும் அதிநவீன எந்திரங்களையும் பயன்ப டுத்தி அறுவடை செய்து வருகின்றனர். பெரிய தேயிலை எஸ் டேட் உரிமையாளர்கள் மோட்டார் மற்றும் காற்றால் இயங்கக் கூடிய அதிநவீன எந்திரங்களை பயன்படுத்தி, ஒரு மணி நேரத் தில் 300 கிலோ வரை பசுந்தேயிலையை அறுவடை செய்கின் றனர். இதேபோல், சிறு தேயிலை விவசாயிகள் கைகளால் இயக்கும் கத்தரிக்கோல் வடிவிலான எந்திரம் மற்றும் மோட் டார் பொருத்தப்பட்ட எந்திரங்களை பயன்படுத்தி வருகின்ற னர்.