பொள்ளாச்சி, ஜுன் 30- பொள்ளாச்சி கவியருவியில் நீண்ட நாட்களுக்கு பிறகு தொடர்மழையினால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அருகே உள்ள குரங்கு என்றழைக்கப்படும் கவி அருவியில் நீர்வரத்து இல்லாததால் கடந்த ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து 6 மாத காலமாக கவி அருவி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடைவிதித்தது. இதன் பின்னர் கோடை வெயில் தாக்கத்தால் தண்ணீர் இன்றி வரண்டு காணப்பட்டது. இந்நிலையில், ஒரு வார காலமாக மேற்கு தொடர்ச்சி மலைகளையொட்டியுள்ள பகுதிகளில் கோடை கால பருவ மழை தொடங்கியிருப்பதால், வால்பாறை மற்றும் சோலையாறு, ஆழியாறு, கவி அருவியில் மழைநீர் ஆர்ப் பரித்து கொட்டுகிறது. இதனைத்தொடர்ந்து, கவி அருவி சுற்றுலா பயணிகளுக் காக திறப்பது குறித்து இரண்டு ஒரு நாட்களில் முடிவு செய் யப்படும் என ஆனைமலை புலிகள் காப்பகம் வனத்துறை தெரிவித்துள்ளது.